Nov 30, 2009

கருப்பு சட்டை போடக்கூடாது....






என்னடா! திடிரென்று இப்படி சொல்றானு பாக்கறிங்களா? அது இன்னும் 2 மாத்துக்கு மட்டும் தான்,கருப்பு சட்டையை போட்டுட்டு வெளிய போனால் சாமி மலைக்கு எப்ப? இதே கேள்வி தான்.

எனக்கு தெரிஞ்ச ஓட்டுநர் ஒருவர் மாலை போட்டுடார் அந்தாளு சொன்னத கேளுங்க '''சாமி ரோட்டில லாரிசாமி ஓட்டிட்டு வந்தப்ப ஒரு நாய்சாமி குறுக்க வந்துடுச்சு நான் மட்டும் பிரேக்சாமியை போடாம இருந்திருந்தா?'''மயக்கம் வர்றதொன்னுதான் பாக்கி கட்டுன பொண்டாட்டி பெத்த புள்ளயிலிருந்து எல்லாமே சாமிதான்...

இது போதாதுன்னு இப்படியெல்லாம பேசினா அய்யப்பன் உங்களை தண்டிச்சுடுவான் அப்படின்னு ஒர் கூட்டம்.

நமக்கு ஒரு யோசணை மலைக்கு போற வண்டியுல ஒரே ஒரு தட்டி வாசகம் தமிழிலும் மலையாளத்திலும் வச்சட்டு மலைக்கு போயிட்டு வர்ற (ஆ)சாமிகளுக்கு பாராட்டு விழா வச்சு பணமுடிப்பு வழங்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

என்ன சாமிகளா ரெடியா?
தட்டி வாசகம் இதோ '''கேரள அரசே!! உச்ச நீதி மன்ற ஆணையை ஏற்று முல்லை பெரியார் அனையின் நீர் மட்டத்தை உயர்த்து''''உயிரோட வந்த அடுத்த வருடம் சேர்ந்து மாலை போடலாம் சாமியோவ்வ்வ்வ்.....

அய்யப் ''பா''

நெடுஞ்சாலை பயணம்
அய்யப்பா! அய்யப்பா!
விபத்து
அய்யோ!!அப்பா!! அய்யோ!!அப்பா!!

பதினெட்டு படியேறி
குழியில்...

பம்பையில்
குளியல்
பன்றி காய்ச்சல்...

வரும் ஆண்டில்
அய்யப்பன்-டாசுமார்க்
புரிந்துணர்வு ஒப்பந்தம்...

இன்னும்
புலி பால் கறக்க
கேரளத்து பட்டிகள்...

பம்பையில்
முழ்கி எழுந்த
குடுமையில் பீய்...

(சாமியோவ் 2 படத்துக்கும் சம்பந்தமில்லீங்கோ...)
Posted by Picasa

Nov 29, 2009

சூலூர் முன்பதிவு நிதியளிப்பு....

 

 



இன்று காலை 11 மணியளவில் சூலூர் கலங்கல் பாதை தோழர்.வே.ஆனைமுத்து அவைக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரியார் சிந்தனைகள் 2 ம் பதிப்பிற்கான முன் பதிவு தொகையை தோழர்.வே.ஆனைமுத்து அவர்களிடம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல் தவணையாக 121 முன் பதிவிற்கான ரூபாய் 4,23,500 அய்யாவிடம் வழங்கப்பட்டது .200 முன்பதிவு என்று முடிவு செய்தது இன்னும் அதிகமாகலாம் என தோழர்கள் நம்பிக்கை தெரிவித்தனர் விழாவில் பாவேந்தர் பேரவை தோழர்களும் தமிழ் உணர்வளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Posted by Picasa

Nov 28, 2009

மன்மத பார்ப்பான்....

 


காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோயில் கருவறைக்குள்ளேயே பெண் களுடன் சல்லாபம் புரிந்து.. அதை செல்போனிலும் படம் பிடித்த மன்மத குருக்கள் தேவநாதன் போலீஸில் சர ணடைந்து கம்பிஎண்ணிக்கொண்டிருக்க... அவன் லீலைகள் உலகெங்கும் செல்ஃபோனில் டாப் 1-ஆக போய்க்கொண்டி ருக்கிறது. இந்த நிலையில்...
நாம் தேவநாதனின் மன்மத விவ காரங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கினோம்.காஞ்சிபுரம் அருகே இருக்கும் தேவநாதனின் ஊரான பழைய சீவரம் கிராமத்தில் ஆஜரானோம். அங்கு அவனது பால்யகால அக்ரஹார நண்பர்களிடம் தேவநாதன் பற்றி நாம் விசாரித்தபோது...’""சின்ன வயசிலிருந்தே பிள்ளையாண்டா னின் நடத்தை சரியில்லை. நாங்க ஸ்கூல்ல படிக்கிறச்சே... அவன் தன்னோட பாட புஸ்தகத்துக் குள்ள கிளுகிளுப்பான லேடீஸ் படங்களை ஒளிச்சி வச்சி, ரசிச்சிண்டு இருப்பான். வயசுப் பையனா வளர்ந் ததும் ஏகக் கெட்டபேரை சம்பாதிச்சான். யாரும் இவனுக்குப் பெண்தர முன்வரலை. அப்புறம் அப்பா அம்மா இல்லாத அப்பாவிப் பொண்ணு கங்கா தலையில் இவ னைக் கட்டிவச்சிட்டாங்க. அவனுக்கு ஐஸ்வர்யா, சாருன்னு ரெண்டு பெண்பிள்ளைகள் இருந்தும்... பய திருந்தலை. கோயிலுக்கு வரும் பொம்பளைகளை மயக்கி... கோயில் கருவறையிலேயே சல்லாபிச்சும் பெட்ரூமில் சல்லாபிச்சும்.. அந்தக் கண்றாவிகளை அவனே தன் செல் போன்ல படமா எடுத்து வச்சிண்டிருந் திருக்கான்னா.... அவன் எப்படிப் பட்டவன்னு பாருங்கோ''’என்றார்கள் எரிச்சலாக.
தேவநாதனின் கிளுகிளு படங்கள் வெளியே வந்தது எப்படி தெரியுமா? தன் செல்போன் ஹேங் ஆக...அதில் இருந்த லீலைக் காட்சிகளை அழித்துவிட்டு... செல்போனை அங்குள்ள ‘பாலாஜி டெலிகாம் சர்வீசஸசில் தேவநாதன் ரிப் பேருக்குக் கொடுக்க... அவனது புத்தியை அறிந்திருந்த கடைக்காரர்... அந்த செல்போனின் பேரண்ட்ஸ் டாக்குமெண்ட்டு களைத் தேடியிருக்கிறார். அப்போதுதான் குருக்கள் அழித்த படங்கள் கிடைத்திருக் கிறது. இதைக்கண்டு ஷாக்கான கடைக் காரர்... தான் பெற்ற இன்பம் பிறருக்கும் கிடைக்கட்டும் என்று... தனது நண்பர் களின் செல்போன்களுக்கெல்லாம் அதை புளூ டூத்மூலம் அனுப்பி வைக்க... அது உல கம் முழுக்க பரவிவிட்டது. இதைப்பார்த்த காஞ்சிபுரவாசி ஒருவர் திகைத்துப்போய்... போலீசின் கவனத்துக்குக் கொண்டு போக... அந்த வீடியோ காட்சி களைக் கைப்பற்றிய போலீஸ்... அதில் ஆறெழு பெண்களுடன் தேவநாதன் லீலைகள் நடத்திய தைக் கண்டு ஷாக்காகி... மத உணர்வைப் புண்படுத்தியதாக 295-ஏ சட்டப் பிரிவின்படி தேவ நாதன் மீது வழக்கைப் பதிவு செய் தது. இதையறிந்த தேவநாதன்... தன் மனைவி பிள்ளைகளுடன் எஸ் கேப் ஆகிவிட்டான். இந்த நிலையில் காக்கிகளுக்கு இன்னொரு தகவல் கிடைத்தது.
2008-ல் மச்சேஸ்வரர் கோயில் நிர்வாகத் தரப்பைச் சேர்ந்த வடிவேல் முதலியாரும் ராஜகோபால் முதலியாரும் கோயில் கருவறையி லேயே சில்மிஷ விவகாரங்கள் நடப்ப தாகக் கேள்விப்பட்டு தேவநாதனைக் கண்டிக்க... அவர்களிடம் "நான் உயர்ந்த குலத்தில் பிறந்தவன். என் விவகாரத்தில் நீங்கள் தலையிட் டால்... அழிச்சிடுவேன் அழிச்சி'’என்று மிரட்டினானாம். இதை அறிந்த காக்கிகள் உபரியாக மேற்படி கோயில் நிர்வாகத் தரப்பினரிடம் புகார் வாங்கி... சாதிப் பிரச்சினையைத் தூண்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் போன்ற குற்றங்களின் பேரிலும் அவன் மீது வழக்கைப் பதிவு செய்தனர்.




இது குறித்து விசாரிக்கப்போன காக்கிகளிடம் தேவநாதனின் அப்பா சுப்பிரமணிய குருக்கள் தகராறு செய்ய... பணிசெய்யவிடாமல் தடுத்ததாக அவரைக் கைது செய்தனர். அதேபோல் அவனது சகலை ரமணி குருக்களையும் தகராறு செய்ததாக உள்ளே தள்ளினார்கள். இதைக் கண்டு பீதியான தேவநாதனும் அவனது உறவினர்கள் 13 பேரும் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதி மன்றத்தை நோக்கி ஓட... தேவநாதனின் ஜாமீன் மனுவை மட்டும் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.இதற்கிடையே மனம் வெறுத்துப்போய் தற் கொலைக்கு முயன்ற தேவநாதனின் மனைவி கங்காவைக் காப்பாற்றி அவரது உறவினரான மணி குருக்கள் வீட்டில் சிலர் தங்கவைக்க... இதை ஸ்மெல்செய்த காக்கிகள், கங்காவை மடக்கி அவர் மூலமே தேவநாதனை தொடர்புகொண்டனர். இனி தப்ப முடியாது என புரிந்து கொண்ட தேவநாதன்... பிராமண சங்கத்தினர் பாதுகாப்போடு காஞ்சியில் சரணடைந்தான்.அவனை புழல் சிறையில் நாம் சந்தித்தபோது “""என் மீது ஒரு சாதாரண வழக்கைப்போட்ட போலீஸ்... பின்னர் தீவிரமான வழக்குகளைப் போட்டிருக்கிறது. என் உறவினர்கள் மீதும் பொய் வழக்கு போட்டிருக்கிறது. வேறு என்ன சொல்ல...'' என்றான் சோகமாக.
தேவநாதனின் ஆபாச வீடியோ காட்சிகளில் இடம்பிடித்த பெண்களை லோக்கல் நண்பர்கள் உதவியுடன் தேடிய நாம்... சிலரை அடையாளம் கண்டு சந்தித்தோம். அவர்களில் சத்யவானோடு தொடர் புடைய அந்த இளம் குடும்பத்தலைவி ""நான் கோயி லுக்குப் போகும்போது அந்த குருக்கள் இதமா பேசுவார். உன் குடும்ப கஷ்டம் தீர... உன்னைக் கரு வறைக்குள் தரிசனம் பண்ண வைக்கிறேன்னு ஒரு நாள் மதிய நேரத்தில் கருவறைக்குள் கூட்டிட்டுப் போனார். அப்ப சிவலிங்கத்தைக் காட்டி... இந்த சிம்பல் என்ன தெரியுமா?ன்னு சொல்லி வெட்கப்பட வச்சார். அப்புறம் அவர் என்னைக் கட்டிப்பிடிக்க.. என்னை விடுங்கோன்னு நான் சத்தம் போட்டேன். யாரும் அங்க இல்லாததை சாதகமாக்கிக்கிட்டு என்னை தொட்டுட்டார். அப்புறம் அந்த பழக்கம் தொடர ஆரம் பிச்சிது. அந்த நேரத்திலும் அவர் கையில் செல்போன் வச்சிருப்பார். ஆனா அதில் கேமராவெல்லாம் இருக்கும்னு எனக்குத் தெரியாமப்போச்சு. இவரால் அவமானம் தாங்கலை''’என்றாள் கண்ணீருடன்.
அந்த மூன்றெழுத்து பெயர் கொண்ட பூக்காரப் பெண்ணோ
""அந்தக் கோயிலுக்கு பூக்கொடுக்கும் நான்... மதிய வேளைகளில் கோயில் மண்டபத்திலேயே உட்கார்ந்து சாயந்தர வியாபாரத்துக்காகப் பூ கட்டுவேன். ஒரு நாள் மதியம் என்னை அழைத்த குருக்கள்... இன்னைக்கு உன் கையாலேயே மூலவ ருக்கு பூ சார்த்துன்னு கூப்பிட்டார். இப்படி ஒரு வாய்ப் பான்னு சந்தோஷப்பட்ட என்னை கருவறைக்குள் அழைச்சிக்கிட்டுப்போனார்.
பக்திப் பரவசத்தோட இருந்த என்னை... திடீர்னு கட்டிப்பிடிச்சார். நான் திமிறி.. விடுங்க சாமின்னு சத்தம் போட... கருவறையில் சல்லாபிச்சா ஆண்டவனின் அனுக்கிரகம் முழுசா கிடைக்கும்னு சொல்லியே... நினைச் சதை சாதிச்சிக்கிட்டார். அழுத என் கையில் 300 ரூபாயைக் கொடுத் தார். இதன்பிறகு அடிக்கடி இதே போல வளைச்சி... பணம் கொடுக்க ஆரம்பிச்சிட்டார். ஆனா இப்படி அசிங்கப்படுவோம்னு நான் நினைச்சிக்கூடப் பார்த்ததில் லை''’’ என்றாள் தேம்பியபடி.
இன்னொரு ஐந் தெழுத்துப் பெயர் கொண்ட குடும்பத் தலைவியோ ""என் வீட்டுக்காரருக்கு பக்தி அதிகம். அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து பரிகார பூஜைகள் பண்ணி தட் சணை வாங்கிக்கிட்டுப் போவார் குருக்கள். ஒரு நாள் என்னை மதிய நேரத்தில் தனியா கோயிலுக்கு வா.. பரிகார பூஜை பண்ணணும்னு கூப்பிட்டார். நம்பிப் போன என்னை கருவறைக்குள் கூப்பிட்டு... என்னையே பூஜை பண்ணச்சொன்னார்.அந்த சந்தோஷத்தில் இருந்த என்னை.. அங்கங்கே தொட்டு சில்மிஷம் பண்ணி... இப்படி அசிங்கப்படுத்திட்டார். நியாயம் கேட்டதுக்கு என்னை மன்னிச்சிடு என் வீட்டுக்காரிக்கு உடம்பு சரியில்லை. அவளால சந்தோஷம் தரமுடியலை. அதனால்தான் இப்படி பண் ணிட்டேன். மன்னிச்சிடுன் னார்''’என்றபடி அழுதாள்.இதற்கு மேலும் பாதிக் கப்பட்ட பெண்களைத் தேடிப்பிடிக்க விருப்பமின்றி... தேவநாத குருக்களின் மனைவி கங்காவை அவரது வழக்கறிஞர் தேசாய் உதவியோடு சந்தித்தோம். ""உங்க கணவர் இப்படி லீலைகள் பண்ணி யதை நீங்க ஏன் தடுக்கலை?'' என்றோம். கங்காவோ
""எனக்கு எதுவுமே புரியலை. நான் குத்துக்கல்லாட்டம் இருக்கேன். எனக்கு என்ன கேடு. அவருக்கு எந்தக் குறையும் நான் வைக்கலை. இருந்தும் வீட்டில் ராமரா இருந்த என் கணவர் பத்தி இப்ப வர்ற தகவல்களை இன்னும் என்னால நம்ப முடியலைங்க. ஆனா முதல்ல சாதாரண கேஸைப் போட்டுட்டு அப்புறம் புதுசு புதுசா போலீஸ் பெரிய வழக்குகளைப் போட்டிருக்கு. அதனால் இதெல்லாம் பொய்வழக்குன்னு தோணுது''’என்றார் அதிர்ச்சியிலிருந்தும் சங்கடத்திலிருந்தும் மீளாதவராய்.குருக்களின் ஆபாச லீலைகளை சி.டி.போட்டு விற்றதாக செல்போன் ரிப்பேர் கடை நடத்திய பாலாஜி யையும் செந்திலையும் கைது செய்திருக்கிறது போலீஸ்.டி.எஸ்.பி. சமுத்திரக்கனியோ, ""அந்த கிரிமினல் குருக்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தராமல் ஓயமாட்டோம்''’என்கிறார் மீசையை முறுக்கியபடியே.
காஞ்சிபுரவாசிகளோ, ""அந்த மச்சேஸ்வரர் கோயிலுக்கு தன் கையால் கும்பாபிஷேகத்தைச் செய்தது... சங்கராச்சாரியார். அப்படியிருக்க... அந்தக் கோயிலைப்பத்தி எப்படி நல்ல விஷயங்கள் வரமுடியும்?''’என்கிறார்கள் நக்கலாய். தேவநாத குருக்களைப் போன்றவர்களால்தான்... ஆன்மீகம் அழுக்காகிக்கொண்டிருக்கிறது.
நன்றி-நக்கிரன் 25-11.09

அப்படியே நம்ம பங்குக்கு.....
நம் கேள்வியெல்லாம் கல் சுமந்து கோவில் கட்டிய நம் சொந்தங்களை சூத்திரன் உள்ளே வராதே என்று சொல்லும் பார்ப்பனர்களை இல்லடா அம்பிகளா! சூத்ராள் கருவறைக்குள் வரலாம். மாமிகள் வீட்டில் இல்லையில்லை ஆத்தில் சூத்ராள் பொம்மனாட்டிகள் ஆபிசில்(கருவறை) என புது மனு தர்மத்தை எழுதியுள்ள தேவநாதனைஅடுத்த சங்கராச்சாரியாராக்க திருவாளர் சோ,இராம கோபாலன்,இல.கணேசன்,எசு.வி.சேகர் ஆகியோர் சங்கர மடத்துக்கு சிபாரிசு செய்ய வேண்டுகிறோம்.என்னப்பா அங்க சத்தம் என்னது இந்துக்கள் மணம் புண்பட்டுச்சா! அதுக்கென்ன பேசா ஒரு கோமம் பண்ணிட்டா போச்சு.....

கொஞ்ச(ம்) கவிதை....


கோவிலுக்கு போகனும்
அர்ச்சணை சீட்டோடு
ஆணுறையும் வாங்கி வா...

யாருமில்லை வா
அது வெறும் கல்....

வடக்கு கோபுர சிலை
இப்படியா!!!-ச்சீசீசீ

இது தாண்டா
ஆ(கா)ம விதி....

மச்சமும் பார்ப்பான்
மச்சேஸ்வரர்..
Posted by Picasa

Nov 26, 2009

மாவீரர் நாள் 2009....

 



உங்கள் உடலை
மண் தின்கிறது-நாங்கள்
மண்ணை தின்கிறோம்..
மண்னுக்காய்.....

சிங்கள நாயே
எங்கள் கல்லறைகளை
நோண்டாதே !
உயிர்த்தெழுவோம்....

உங்க ஊர்வழியில்
கழிவறை....
எங்க ஊர்வழியில்
கல்லறை...

தலைவருடன்
இறுதி விருந்து
செரித்தது...
கல்லறையில்....

என் மீதூறும்
மண் புழுவே-போ!!
சிங்களவன் காலை குதறு....

நாங்கள்
விதைக்கப்பட்டிருக்கிறோம்
எம் மண்னை
மிதித்த சிங்களவனுக்கு
கன்னி வெடிகளாய்....


எம் மண்ணிலிருந்து
இனி
அகற்ற முடியாது...
Posted by Picasa

தம்பியின் கவிதை

 


நாம் அணிவகுத்துள்ளோம்....
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
நாம் அணிவகுத்துள்ளோம்
இழந்த எமது நாட்டை மீட்க
எதிரி எமது நாட்டைவஞ்சகமாக அபகரித்துவிட்டான்!
அதைக்கண்டு நாம் அஞ்சவில்லை!
புயலெனச் சீறிஇழந்த நாட்டை மீட்க
நாம் அணிவகுத்துள்ளோம்
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது படையணி கடக்க வேண்டியது
நெருப்பாறென்பது எமக்குத் தெரியும்!
ஆனால்...அதைத் தாங்கக் கூடிய
மக்கள் ஆதரவென்னும்கவசம் எம்மிடம் உண்டு!
எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது!
எமதுஆத்ம பலமோ அதைவிடவலிமைவாய்ந்தது!
எதிரியின் குண்டுகள் வெடிக்கும்...
ஆனால்எமது விடுதலை நெஞ்சங்கள்
எரிமலையென வெடிக்கும் சத்தத்தில்
அதன் சத்தம் அமுங்கிவிடும்!
நாம் அணிவகுத்துள்ளோம்....
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது அணிவகுப்புஎமது
தமிழ்ஈழ மக்களிடையேஅணிவகுத்துச் செல்கிறது!
நாம் செல்லும் இடமெல்லாம்...
எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்!
மக்களிடம் உள்ளபிரதேசம்
சாதிமதமென்னும் பேய்களும்அலறி ஓடுகின்றன...
எமது படையணி விரைகிறது...
எம தேசத்தை மீட்க!
நாம் செல்லும் இடமெல்லாம்...
காடுகள் கழனிகள் ஆகின்றன!
வெட்டிப் பேச்சு வீரர்கள்மிரண்டோடுகின்றனர்...!
உழைப்போர் முகங்களில்உவகை தெரிகிறது.
ஏழைகள் முகங்களில்புன்னகை உதயமாகிறது.
(தமிழீழ தேசியத் தலைவர்திரு.வே. பிரபாகரன் அவர்களால்1981 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கவிதை
Posted by Picasa

Nov 11, 2009

தமிழ் மீனவன்...

 



மீனவர்கள் நிலை பற்றி ஆவணப்படம் எடுப்பதாகவும் அதற்கு ஒரு பாடல் வேண்டுமெனவும் தோழர் கேட்க அதற்காய் தயார் செய்த பாடல் இதோ...

பல்லவி.

புயலு வந்து கொன்னதெல்லாம்
பழைய சேதிங்க..சிங்கள
பயலு வந்து அடிக்கிறானே
என்ன நியாயங்க ?சொல்லுங்க
என்ன நியாயங்க ?

சரணம் 1

முள்ளில்லா மீனு வாங்க
கடைக்கு போறீங்க-நாங்க
நெஞ்சமெல்லாம் முள்ளாக
நிக்கிறோமுங்க ஆமா..
நிக்கிறோமுங்க...

வலவீசி வலவீசி
தேடிப்போனேமே..
வலயெல்லா மீனாக
நாங்கெல்லா பிணமாக
கெடக்குறோமுங்க....

சரணம் 2

புடிச்சு வந்த மீனுக்கிங்க
துணியில்லீங்க..
புடிக்க போன எங்களுக்கும்
துணியில்லீங்க..ஆமா
துணியில்லீங்க....
அம்மணமா நிக்க வச்சு
அழகு பாக்குறான்-சிங்களவன்
அளந்து பாக்குறான்-தமிழனை
அளந்து பாக்குறான்....

கட்டிவச்ச பாலமொன்னு
முழுகி போச்சாமே ?
கட்டுகதை நல்லத்தா
அவுத்து விட்டிங்க
எல்லைக்கோடு மட்டும்
நீங்க போட்டு வையுங்க...
கடலுல போட்டு வையுங்க...
அழுத்தமா போட்டு வையுங்க..

Nov 10, 2009

பசிஇஇஇஇஇ

 



புலி பசித்தாலும்
புல்லை திண்னாது..
போதும் நிறுத்துங்கடா!!
புல்லாவது...
Posted by Picasa

தமிழரசன்,பாரதி விடுதலை...

 

 


கோவை சிறையிலிருந்து இன்று மாலை 7 மணியளவில் தேசிய கொடி எரிப்பு வழக்கிலிருந்து உச்சநீதிமன்ற பிணையில் வெளியான தோழர்கள் பா.தமிழரசன்(த.தே.போ.க),வே.பாரதி(த.தே.வி.இ) ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் பெ.தி.க பொதுச்செயலாளர் கோவை.கு.இராமகிருட்டிணன்,த.தே.வி.இயக்க தலைவர் தோழர்.தியாகு,த.தே.பொ.கட்சி பொதுச்செயலாளர் தோழர்.மணியரசன் மற்றும் அவ்வியக்கங்களை சார்ந்ந தோழர்கள்,பி.யு.சி.எல்,மற்றும் பல முற்போக்கு அமைப்புகளை சார்ந்த தோழர்கள் உட்பட்ட சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

எவ்வளவு காலங்கள் சிறையில் அடைத்தாலும் தேசிய கொடியை ஏற்ற மாட்டோம் என்ற தோழர்களின் உறுதியை அனைவரும் பாராட்ட,தோழர்கள் மற்றும் குடும்பத்தாருடன் தமிழரசனும்,பாரதியும் வீடு நோக்கி புறப்பட்டார்கள் அடுத்த கட்ட போரட்டத்துக்கும்,சிறைக்கும் அஞ்சோம் எனக்கூறியவாறே...
Posted by Picasa

Nov 8, 2009

தேசியம்....

 


கோவையில் இலங்கை தமிழர்களை பாதுகாக்கத்தவறிய மத்திய அரசை கண்டித்து தமிழ் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்தேச பொதுவுடமைக்கட்சி உள்ளிட்ட தமிழ் இயக்கங்கள் மே-24 ஆம் தேதி கண்டண ஆர்ப்பாட்டம் நடத்தின.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 8 பேர் இந்தியக் கொடியை தீ வைத்து எரிக்க முயன்றதாக கூறி கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் 8 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 8 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர்.ரகுபதி கொடிகை எரிக்க முயன்ற 8 பேரும் தினமும் காலை 6 மணி முதல், மாலை 6 மணிவரை தங்கள் வீடுகளின் முன்பு தேசியக் கொடியை ஏற்றிவைக்க வேண்டும்.

ஒருவாரம் தினமும் 3 மணிநேரம் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

சூன் 9 தேதி சென்னை உயர்நீதி மன்றத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனையை ஏற்று கைதான 8 பேரில் 6 பேர் விடுதலையானார்கள்,தமிழரசன்,பாரதி ஆகிய 2 இளைஞர்கள் மட்டும் சிறையிலேயே இருந்து கொண்டு ஜாமீன் நிபந்தனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள்..

நாங்கள் இரானுவ வாகனத்தாக்குதலில் சிறையில் இருந்த நேரம் அப்போது.கைதான இருவர் சகோதரர்கள்(தமிழரசன்,சங்கர்)இதில் சங்கர் வெளியே சென்று விட்டார்,நான் தமிழரசனிடம் கேட்டேன் 'தோழர்! சங்கர் கொடியேற்றும் போது நிங்களும் வெளியே செல்லலாமே? 'இருவரும் ஒரே வீட்டில்தானே உள்ளீர்கள்!எனக் கேட்டதற்கு மாநாட்டு பணி காரணமாகவே சங்கர் வெளியே செல்கிறார்,நாங்களும் சென்று விட்டால் அவர்கள் விதித்த நிபந்தனை சரி என்றாகி விடும்.எத்துனை நாட்கள் ஆனாலும் சிறையில் இருந்தே வழக்கை சந்திப்போம்.

தோழர்களின் உறுதி வெற்றி பெற்றுள்ளது நவம்பர் 3 ல் உச்சநீதிமன்றம் அந்நிபந்தனைகள் சட்டத்திற்குற்பட்டது இல்லையெனவும் இனி இது மாதிரியான முன்மாதிரிகளை எந்த வழக்குக்கும் கொள்ளக்கூடாதெனவும் கூறியுள்ளது..

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு
http://courtnic.nic.in/supremecourt/temp/6138200923112009p.txt

நமமளுக்கு சட்டம் எல்லாம் தெரியாதுங்க ஆனா கெஞ்சம் நியாயம் தெரியுங்க..தேசிய கொடிய எரிக்க நாட்டின் குடிமக்கள் முயற்சி செய்கிறார்கள் என்றால், .அதற்கான காரணத்தை கண்டு அதை களையாமல்,ஏதோ நாட்டுபபற்றை ஊட்டுகிறேன் என இம்மாதிரி நிபந்தணை விதித்தால்,உருவ பொம்மையை எரித்தால் எரிக்கப்பட்டவர்களை குளிப்பாட்டி விட வேண்டும் என நிபந்தனை விதிப்பார்கள் என எதிர்பார்த்து பயபுள்ளைகள் அசின்,நயன்தாரா,திரிசா உருவ பொம்மையை எரிக்கப்போறானுக சாக்கிரதை...

குறிப்பு- ஆறு மாத கால சிறைவாசத்திற்கு பின் தோழர்கள் தமிழரசன்,பாரதி ஆகியோர் வரும் செவ்வாய் மாலை கோவை சிறையிலிருந்துவெளிவர உள்ளார்கள் வாய்ப்பிருக்கும் தோழர்கள் வரவேற்க வரவும்,தேதி நேரம் உறுதி செய்ய தோழர்.சங்கர்-9865555275..
Posted by Picasa

யார் ஆசுகார் நாயகன் ?

 

 


நேற்று நம்ம கைப்பேசிக்கு வந்தது அந்த குறுந்செய்தி.கலைஞானி கமல்காசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அனுப்பினது அட! நம்ம கமல்தாசன் சரி ஒரு போனப்போடுவோமுன்னு கூப்பிட்டு,தம்பி எங்கப்பா இருக்கினு கேட்டேன்.
அந்த கிறுக்குபய புள்ள இந்த மழைகாலத்துல ஊருக்குள்ள கட்டி முடிக்காத கட்டிடத்தின் மொட்டை மாடியிலிருந்து எல்லோருக்கும் செய்தி அனுப்பிட்டிருக்கான்.

இவன் எப்பவுமே இப்படித்தானுங்க, போன வருடம் எங்காளுக்கு பொறந்த நாளுன்னு சொல்லி பால்காரன்,பேப்பர்காரன்,தபால்காரன்,கொசு மருந்தடிக்கரவன் இப்படி பல வேடத்தில வந்து வாழ்த்து சொன்னான்,சித்தி சத்தம் போட்ட பின்னடிதான் நிறுத்தினான்.

வாப்பா,கமல்தாசா!என்ன உங்காளு பிறந்த நாள் அமர்க்களப்படுத்தற,நீட்டிய கேக்கை வாங்கிய படி கேட்க...

ஆமண்னே! எங்க உலக நாயகன்,காதல் இளவரசன்,கலைஞானி,ஆசுகார் நாயகன்னா சும்மாவா?

ஏய்!நிறுத்து எல்லாம் சரி,கடைசியில அதென்ன ஆசுகர் நாயகன் உங்காளு இவ்வளவு நாளா பிலிம் காட்டுனா பரவாயில்ல,அதுதான் தமிழ்நாட்டிலிருந்து ஏ.ஆர்.ரகுமான் வாங்கிட்டாரே! சும்மா இதையே சொல்லிட்டு...

ஏன்? எங்களுக்கு ஆசுகார் கிடைக்காதா? அப்படி ஒருவேளை கிடைக்கலைன்னா அது அந்த விருதுக்குத்தான் இழப்பு....

அடேய்! புல்லரிக்குதுடா!ஆசுகாரு தானே இந்த தசாவதாரம் தயாரிப்பாளர் கூட ஒன்னு வச்சிருக்கார் வாங்கிக்க சொல்லு..

அண்னே! உங்களுக்கெல்லாம் கிண்டலே பொழப்பா போச்சு,நாங்களும் வாங்குவோம்,அப்புறம் பாருங்க..

தம்பி,உங்காளு ஆசுகார் வாங்கனும்முன்னா,அவரு நடிச்ச படத்திலேயே எனக்கு பிடிச்ச படமொன்னு இருக்கு அதே மாதிரி இனிமே நடிக்க சொல்லு எனச் சொல்லியவாறே கேக் கொடுத்த பையன சும்மா அனுப்ப கூடாதுன்னு.
இந்தாப்பா!உங்காளு பிறந்தநாளுக்கு உனக்கென் அன்புப்பரிசு சொல்லி இந்த வார தமிழக அரசியல் இதழைத்தர...

கொலைவெறியோடு வாங்கிக் கொண்டே கேட்டான்.ஆமா! அதென்ன படம் உங்களுக்கு பிடிச்சது...

வேறென்ன 'பேசும்படம்' தான் அது.....

Nov 4, 2009

வாழும் அயோக்கியர்கள்...

 


நம்மூர்ல இந்த கந்தசாமியும்,முனுசாமியும் மாறி மாறிபிரசிடண்ட் ஆனதிலிருந்து ஒரே அளப்பாரைதான் போங்க ஊரெல்லாம் போசுடர் மயம்.

இந்த கந்தசாமி ஆளுக எங்கண்னண் வாழும் மகாத்மானு எழுத திருப்பி முனுசாமி ஆளுக வாழும் காமராசருன்னு இதெல்லாம் போதாதுனு நம்முரு புலவன் ஒருத்தன் பஞ்சாயத்து போர்டு மெம்பர் ஆயிட்டான் உடனே அந்தாளு வாழும் வள்ளுவன்னு எழுத, நம்மளுக்கு இதையெல்லாம் பார்க்கும் போது ஒரே சந்தேகதானுங்க.....

கந்தசாமி வாழும் மகாத்மானா,காந்தி வந்து செத்துப்போன கந்தசாமியா? காமராசர் செத்துப்போன முனுசாமியா?..இதெல்லாம் போதாதுனு நிரந்தர பொதுச்செயலாளரு,நாளைய முதல்வரு இப்படி வேற தனியா கிளம்பிட்டாங்க, அட! நிரந்தர மனுசனே கிடையாது வாழும் கலைவானர்(அடங் கொக்கமக்கா நமக்கும் இந்த நோய் தொத்திகிடுச்சு) பகுத்தறிவு புயல் விவேக்(தேவருங்கோ) மாதிரி சொன்னா அட இன்னைக்கு செத்த நாளைக்கு பால்....

சரி,இப்படி கிறுக்கறதுக்கு இடமெல்லாம் கிடையாது.அப்படித்தான் அன்னைக்கு அவிநாசி ரோட்டுல பதிக்க வைத்திருந்த குடிநீர் குழாயில நாளைய முதல்வரே வருக வருக..எழுதி வைக்க அப்பறம் வேறன்ன கொஞ்ச நாள் கழிச்சு நாளைய முதல்வரை எடுத்து புதைக்க வேன்டியதுதான்....
Posted by Picasa

Nov 3, 2009

ஊரறிந்த ரகசியம்....

 


இந்த வார்த்தைகளை எப்பவாவது பார்க்கவோ படிக்கவோ நேரிட்டால் சற்று நகைச்சுவையாகவும் சிந்திக்க தோன்றும் விதமாகவும் இருக்கும். நமக்கு இந்த வார்த்தையோட வேர கண்டுபிடிக்கற சமச்சாரமெல்லாம் தெரியாது.சும்மா நம்ம அளவுக்கு பார்க்கலாம் வாங்க..

ஊரறிந்த ரகசியம்.....

சின்ன வயசா இருக்கும் போது தூர்தருசனில் போடும் சீரியல்
பேரு ஊரறிந்த ரகசியம்.ஏதோ குட்டி கதைகளை போட்டுட்டு இருந்தாங்க.இப்ப அதில்ல விடயம் அதெப்படி ஊரறிந்தா அது ரகசியமாகும் யாருக்குமே தெரியாம இல்லையில்ல யாரோ சில பேருக்குமட்டும் தெரிஞ்சத்தானே அது ரகசியம்.

அட ஆமாங்க ஊரறிஞ்ச ரகசியம் இருக்குங்க அது என்னன்னா?
இந்தியா இலங்கைக்கு ஆயுத உதவி செய்யவேயில்லை!!!!
இராசிவ் காந்தி கொலையப்ப சுப்பரமணிய சாமி பிறக்கவேயில்லை!!!!!!!
வேற எதாவது இருந்த அவுத்து விடுங்க....

உண்மைக்கதை...

எனுங்க உண்மையா இருந்தா அதெப்படிங்க கதையாகுங்க? கதையா இருந்த அதெப்படி உண்மையாகுங்க? இப்படி போட்டு ரொம்ப நாளா மண்டையை பிச்சுட்டு இருந்தப்பத்தேனுங்க..இப்பத்தானுங்க அதுக்கு விடை கிடச்சதுங்க...

அட! அது என்னன்னா?
இந்திய தமிழ் எம்.பி க்கள் இலங்கை பயணம்.....
முகாமில் உள்ள தமிழர்கள் சொந்த ஊரில் குடியேற்றம்....

இப்படியெல்லாம் போட்டு மண்டையை பிச்சுட்டு வண்டியில போய்கிட்டு இருந்தப்பத்தான் அந்த சுவரொட்டி தட்டுப்பட்டது. ஏ! வீட்டல சொல்லிட்டு வந்துட்டியானு பின்னாடி வந்தவன் சொன்ன போதுதான் சுதாரித்தேன்.அட அதென்ன சுவரொட்டின்னா!! வீரத்துறவி முழங்குகிறாராமே?...

இப்ப மறுபடியும் மண்டையை பிச்சுக்க வேண்டியதுதான்..
ஏம்ப்பா!!! எல்லாத்தையும் துறந்தவன்தான் துறவின்னு கேள்விப்பட்டிருக்கேன் அப்ப வீரமுள்ளவன் எப்படி துறவியாக முடியும்..இல்ல துறவிக்கெப்படி வீரமிருக்கும்...
யாராச்சும் பதில் சொல்லுங்களெப்பா.......
Posted by Picasa