Aug 3, 2010

Jun 4, 2010

மழலைகள்..

 



ஆற்றங்கரை
மணலில்
வீடு கட்டி
பொம்மை திருமணம்
முடித்து வந்தோம்....

வீட்டுத் திண்ணையில்
தாத்தாக்கள்
வீட்டைக் கட்டிப்பார் !!!!!
கல்யாணம் செஞ்சுபாரு !!!!!!
Posted by Picasa

May 27, 2010

கோபுரங்கள் சாய்வதுன்டு....

 



காளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் நேற்று மாலை இடிந்து விழுந்தது.

சரியாக பராமரிக்கப்படாத பழைய கட்டிடம் கண்டிப்பாக இடியத்தான் செய்யும். கோவில் கோபுரம் இடியுமுன் அது இப்பத்தான் இடிந்து விழும் என்பதை கணிக்க மண் பரிசோதணை நிபுணர்களை நாடிய போது சகலத்தையும் பொத்தி கொண்டிருந்தவர்கள் விழுந்தபின் .கூறுகிறார்கள்.....

http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=24c969a9-7c52-4e17-860b-bbd0c52b495d&CATEGORYNAME=TNATL

நமக்கிருக்கும் ஒரே வருத்தம் அக்கோபுரம் இடிந்த போது சுமார் 200 குரங்குகள் இறந்து விட்டன என்பதே...
Posted by Picasa

May 23, 2010

மங்களூர் விமான விபத்து...

 



கனவு தின்ற பறவை

கட்டிடங்கள் சூழ்ந்த
மொட்டை மாடி
நிலவை இரசித்த படி
கனவுகள் காண்பதுண்டு
அண்ணனும் நானும் ...
இரவின் அழகில்
ஊறும் பறவை
விளக்கடித்து
காற்றை கிழித்தபடி ...


மதிய பாடவேளைக்கு
முழுக்கு போட்ட படி
விமான நிலையம் செல்வோம்
பறவை காண ...
விமானப்பயணம்
கனவாக இருந்திருக்கலாம் ...
கட்டிடங்கள் சூழ்ந்த
மொட்டை மாடி
நிலவை இரசித்த படி - தனியே
அதோ
கனவு தின்ற பறவை !
அந்த விமான விபத்தில்
இறந்தவர் பட்டியலில்
அண்ணன் பெயர்
இல்லாமல் இருந்திருந்தால் ...

விபத்தில் உயிரிழந்த அணைவரின் குடுபங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்...
Posted by Picasa

May 20, 2010

சலுகைகளை சாகடிப்போம்...

 



சலுகைகளை சாகடிப்போம்
இதைத்தான் சொன்னான் என் நண்பன் ஒருவன் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த அவன் சொன்ன இந்த வார்த்தைகள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக...

சலுகைகளை சாகடிக்கலாமா ? ஆம் என்றால்

ஒரே வீட்டில் உள்ள அரோக்கியமான கொழு கொழு குழந்தைக்கு தருவதை விட மற்றொறு நோஞ்சான் குழந்தைக்கு தரும் அதிகப்படியான பால் சலுகையே...

அதே போல படிப்பு ஏறாத குழந்தைக்கு தரும் டியூசன் சலுகையே...

பேருந்தில் முதியோர் உடல் ஊணமுற்றோர் இருக்கை சலுகையே...

இப்போது சொல்லுங்கள் சலுகைகளை சாகடிக்கலாமா ???

அங்கே மனிதம் செத்து விடும்..குழியும் மேடுமாக உள்ள சமூகம் எல்லோரின் ஆசையுமே சமூகம் சம்மாக வேண்டும் என்பதே சரி சம்மாக்க மண் கொட்ட போகிறோம், இப்ப மேடு சொல்லது அய்யோ குழிக்கு மண் அதிகமாப் போகுதே.. எப்படி நண்பர்களே உங்க சமூகம் சம்மாகும்...

அதிகப்படியான சலுகைகள் சம்மாக்கவே....

சரி எது குழி ? எது மேடு ?

எவனுடைய தாத்தன் அடக்கின்னோ அவன் மேடு....
எவனுடைய தாத்தன் அடங்கினானோ அவன் குழி...

காலம் மாறிப் போச்சு நாங்கெல்லாம் மார்டன், ஆம் நிச்சயமாய் அதற்கு நம் தாத்தன்கள் செய்த்தை செய்யாமலிருப்பதும் மற்றும் அதற்கான மாற்று வழிகளுமே...

ஆயிரமாயிரம் மாற்று கருத்துகளுனண்டு வாருங்கள் விவாதிப்போம் சலுகைகளை காத்து மனிதம் சமைப்போம்...

பங்கித்தின்னா
பசி ஆறும்
கொடுடா...
இட ஒதுக்கீடு.....
Posted by Picasa

May 17, 2010

சாதி வாரி கணக்கீடு....

2011-க்கான பத்தாண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடுத்த மாதத்தில் நம் தமிழ்நாட்டில் தொடங்க இருக்கின்றன. இக்கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும் என்ற குரல் இந்திய ஒன்றியம் முழுதும் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. நாடாளுமன்றத்திலும் சூடான விவாதம் நடந்து வருகின்றது.

பெரியார் திராவிடர் கழகமும் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீதம் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தி தமிழ்நாட்டின் மூன்று பகுதிகளிலிருந்து புறப்பட்ட பரப்புரை குழுக்கள் பத்து நாட்கள் பயணம் செய்து, 2007 அன்று திருச்சியில் நடத்திய கழக மாநாட்டில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றினோம். ஏன் இந்த கோரிக்கை? ஏன் இவ்வளவு வலிமையாக எழுப்பப்படுகிறது?

இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை ஒரு மனிதனின் வாழ்விடம், தொழில், உடை, திருமணம், கல்வி, சமூக அந்தஸ்து அனைத்துமே அவரவர் பிறந்த வழியே தீர்மானிக்கிறது. பெரும்பான்மை மக்களின் வாக்குகளைக்கொண்டு அமைக்கப்படும் குடிநாயக ஆட்சி, பெரும்பான்மை மக்களின் கல்வி, தொழில், வாழ்வுரிமை பற்றியும் அக்கறை காட்ட வேண்டுமல்லவா? அதுதான் இல்லை. விடுதலை பெற்று, தனி அரசமைப்பு சட்டம் இயற்றி அறுபது ஆண்டுகள் கடந்த நிலையிலும், பெரிய தடைகளையெல்லாம் தாண்டி இந்த ஆண்டுதான் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 9 சதவீத இடம், 60, 70 விழுக்காடாய் இருக்கிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு செய்வது தொடர்பான இந்திரா சகானி (எதிர்) இந்திய ஒன்றியம் (1992); எம். நாகராஜ் (எதிர்) இந்திய ஒன்றியம் (2006); அசோக் தாக்கூர் (எதிர்) இந்திய ஒன்றியம் (2008) போன்ற வழக்குகளில் எல்லாம் எதிர் தரப்பினர் வைத்த முதன்மையான வாதம் என்ன? 1931க்குப் பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை என்பதை முன்வைத்தே வாதாடினார்கள்.

மேற்கண்ட மூன்று வழக்குகளிலும் ஒட்டு மொத்த மக்களின் சமூக கல்வி நிலை குறித்து முழுமையான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும்கூட, 2011 கணக்கெடுப்பிலும் சாதிவாரி விவரங்களை எடுக்க உரிய வழி வகைகள் ஏதும் செய்யப்படவில்லை.

இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1892 இல் முதன்முறையாக எடுக்கப்பட்டபோது, அது முழுமையான கணக்கெடுப்பாய் அமையவில்லை.

1881 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில்தான் சாதிவாரி கணக்கெடுப்பு முழுமையாக எடுக்கப்பட்டது. அது 1931 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நடந்தது. இரண்டாம் உலகப் போர் நடந்து வந்த நிலையில் 1941 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு சரிவர, முழுமையாக எடுக்க முடியவில்லை.

குடியரசான பிறகு இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1951 இல் நடைபெற்றபோது, சாதிவாரி கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. ஆனால் அரசியல் சட்டத்தின் 341, 342 ஆவது பிரிவுகளின்படி பட்டியல் இன சாதி, பழங்குடியினர் கணக்கெடுப்பு மட்டும் தொடர்கிறது.

அரசியல் சட்டத்தின் 340 ஆவது பிரிவு சமூகத்திலும் கல்வியிலும் பின் தங்கியுள்ள வகுப்புகளின் நிலையை பற்றியும், அவர்களுக்குள்ள சங்கடங்களைப் பற்றியும், அத்தகைய சங்கடங்களைப் போக்குவதற்கான வழி வகைகள் பற்றியும் அவர்களை மேம்படுத்துவதற்காக மத்திய (அ) மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்றவற்றை ஆய்வு செய்து அறிக்கை தர ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறுகிறது.

அதன் அடிப்படையில் 1953 இல் அமைக்கப்பட்ட காகாகலேல்கர் ஆணையம், 1978 இல் அமைக்கப்பட்ட மண்டல் ஆணையம், பல மாநிலங்களில் அமைக்கப்பட்ட இவையொத்த பிற ஆணையங்கள் எல்லாம் பிற்படுத்தப்பட்ட மக்கள் குறித்த சாதிவாரி கணக்கெடுப்பு செய்ய பரிந்துரைத்தும், அரசு உயர்சாதியினரின் எதிர்ப்பைக் கருதி திட்டமிட்டே புறக்கணித்தும் வந்துள்ளது.

ஆனாலும், இதே மய்ய அரசு தான் பிற்படுத்தப்பட்டோர் குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் வருகிறபோதெல்லாம் 1931 முதல் பிற்படுத்தப்பட்டோரின் முறையான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஏதும் இல்லை என்ற பார்ப்பன உயர்சாதியினரின் வாதங்களுக்கு முகம் கொடுத்து பார்ப்பனருக்கு எதிரான வாதங்களை முன் வைத்து வந்துள்ளது.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் “சூத்திரர்கள் யார்?” (1946) என்ற தமது நூலில்:

“சூத்திரர்களின் பிரச்சினையின் ஆழம் குறித்து மக்கள் சரியாக உணர்ந்திராததற்கு காரணம் சூத்திரர்களின் மக்கள் எண்ணிக்கை குறித்து அவர்கள் அறிந்திராமல் இருப்பதுவே ஆகும். கெட்ட வாய்ப்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பும் அவர்களின் கணக்கை தனியாக எடுக்கவும் இல்லை. என்றாலும், தாழ்த்தப்பட்டவர்கள் நீங்கலான “சூத்திரர்”களின் எண்ணிக்கை இந்து மதத்தைப் பொருத்தவரையிலும் 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

மண்டல் குழு அறிக்கை இந்துக்களில் 44 சதவீதப் பேரும், பிற மதங்களில் 8 சதவீத பேரும் என மொத்தம் 52 சதவீத பேர் பிற்படுத்தப்பட்டோர் எனக் கூறுகிறது. தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு முதலில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 36 சதவீதம் என்றது. ஆனால், பின்னர் அவர்களே எடுத்த மாதிரிக் கணக்கெடுப்பு 42 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்டவர்கள் என்கிறது.

வட்டாரத்துக்கு சில வீடுகள் என எடுத்து கணக்கிடும் மாதிரி கணக்கெடுப்பு துல்லியமானது அல்ல என்றாலும் அதனை ஆதாரமாகக் காட்டி கூக்குரல் எழுப்புகின்றனர். அரசியல் சட்டத்தின் 15(4) பிரிவு சமுதாயத்திலும் கல்வியிலும் பின் தங்கியுள்ள பிரிவினருக்கு கல்வி நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் (இடஒதுக்கீடு) செய்வது குறித்துப் பேசுகிறது. பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை பல்வேறு நிலைகளில் அவர்கள் பெற்றுள்ள கல்வித் தகுதி, மாநில சராசரியோடு அப்பிரிவினரின் சராசரி ஆகியவற்றை ஒப்பிட்டே முடிவு செய்வது பொருத்தமாயிருக்கும்.

அரசு வேலை வாய்ப்புகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத சாதியினருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து அரசியல் சட்டத்தின் 16(4) பிரிவு கூறுகிறது. ஒரு பிரிவினரின் மக்கள் தொகை, அப்பிரிவினரில் அரசு வேலை பெற்றுள்ளோர் எண்ணிக்கை, வேலையின் எந்தப் படி நிலையில் எத்தனை பேர் என்ற விவரம் இல்லாமல் எவ்வாறு அரசு சரியாக செயல்பட முடியும்?

1993 ஆம் ஆண்டின் பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையச் சட்டத்தின் 11 ஆவது பிரிவின் (1) உட்பிரிவு, “இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின் ஒரு முறையும், அதன்பின் ஒவ்வொரு பத்தாண்டிலும், சமுதாயத்திலும், கல்வியிலும் பின் தங்கியுள்ள நிலையிலிருந்து மீண்டு விட்ட பிரிவினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து நீக்கவும், அல்லது புதிதாக சேர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறுகிறது. இது சாதிவாரியான கணக்கெடுப்பு இல்லாத நிலையில் எவ்வாறு நிறைவேற்ற முடியும்?

நீண்டகாலமாக இடஒதுக்கீட்டு முறை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப் படும். தமிழ்நாடு, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் பொதுப் போட்டி (Open Competition) இடங்களிலேயே பெரும் பகுதியைப் பெறும் அளவுக்கு பிற்படுத்தப்பட்ட மக்களும், சில இடங்களைப் பெறும் அளவுக்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களும் வளர்ந்துள்ளனர். இதைக் கணக்கில் கொண்டு, இதுவரை ஏறத்தாழ எல்லா இடங்களையுமே மொத்தமாக அனுபவித்து வந்த உயர்சாதிக் கூட்டம், தமக்கு அடுத்த நிலையில் போட்டியாக வளர்ந்து வரும் பிற்படுத்தப்பட்ட மக்களை முடிந்தவரை கல்வி, வேலை வாய்ப்புகளில் வராமல் பார்த்துக் கொள்வதில் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட்டு வருகின்றன.

கடந்த காலங்களில் அரசின் உயர் பீடங்களில் அமர்ந்துவிட்ட உயர்சாதி அதிகாரிகளின் உதவியோடு தங்கள் ஏகபோக உரிமையையும் முடிந்த வரையிலும் காப்பாற்ற பல்வேறு வஞ்சக நடவடிக்கைகளிலும், பரப்புரைகளிலும் ஈடுபடு கின்றனர். சாதி வாரி கணக்கெடுப்பால் சாதியம் சமூகத்தில் ஆழமாய் வேர் கொண்டுவிடும் என்ற ஒரு பரப்புரையை செய்கின்றனர். ஆனால், இவர்கள், கடந்த 70 ஆண்டுகளாக சாதிவாரி கணக்கெடுப்பில்லாத நிலையிலும் சாதியம் சமூகத்திலும், அரசியலிலும் ஆளுமை செலுத்துவதை ஏனோ கணக்கில் எடுக்கத் தவறுகின்றனர்.

சாதிகளுக்குள் பிளவுகளை சாதிவாரி கணக்கெடுப்பு ஏற்படுத்தும் என்ற வாதமும் மேற்கண்டவாறே ஆதாரமற்றதாகும். சாதிவாதி கணக்கெடுப்பால் மக்கள் தொகை அதிகமுள்ளோரின் ஆதிக்கம் சமுதாயத்தில் ஏற்படும் அபாயம் உள்ளது என்றொரு கருத்தையும் உயர்சாதியினர் கூறுகின்றனர். இதுவரை சூழ்ச்சிகளாலும், தந்திரங்களாலும், கல்வி, வேலை வாய்ப்புகளில் முற்றாதிக்கம் செலுத்தி வரும் கூட்டம் மிகச் சிறுபான்மையான பார்ப்பன சாதியே ஆகும்.

மக்கள் தொகை அதிகமுள்ள பிரிவினர் ஆதிக்கம் செலுத்தி விடுவார்கள் என்ற வாதம் உண்மையானால், முற்று முழுதாய் இந்துக்களே வாழ்ந்து வந்த இந்தியாவில், வெளியிலிருந்து வந்த மிகக் குறைவான எண்ணிக்கைக் கொண்ட இஸ்லாமியர் ஆட்சி எவ்வாறு ஏற்பட்டது? அதற்குப் பிறகு முழுதும் இந்துக்களும், இஸ்லாமியர்களுமே இருந்த இந்தியாவில் நூற்றுக்கணக்கில் மட்டுமே நுழைந்த ஐரோப்பியர்கள், குறிப்பாக ஆங்கிலேயர்கள் ஆட்சி எப்படி ஏற்பட்டது?

அரசியல் சட்டத்தின் 15, 16, 29(2) ஆகிய பிரிவுகள் ‘தம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம், மரபு வழி, மொழி ஆகிய காரணங்களுக்காக பாகுபாடு காட்டப்படுவது கூடாது என தடை செய்துள்ளது. ஆகவே சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவது சரியல்ல என்று ஒரு சொத்தை வாதம் முன் வைக்கப்படுகிறது. இவ்வாதத்தை வைப்போர் சாதியைத் தவிர பிற கூறுகளான மதம், இனம், பாலினம், பிறப்பிடம், மரபு வழி, மொழி பற்றிய விவரங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதியப்படுகின்றன என்பதை ஏனோ கவனிக்கத் தவறுகின்றனர். மேலும் பட்டியல் இன வகுப்புகள், பழங்குடிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியர் போன்றோர் பற்றிய விவரங்களும் தொடர்ச்சியாக பதியப்பட்டே வந்துள்ளன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

ஆக, ஒவ்வொரு முறை பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வருகிற போதெல்லாம் 1931க்குப் பின் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு இல்லை என்பதையே முதன்மையான வாதமாய் எதிர்தரப்பினர் வைத்து வந்ததையும், ஒரு வேளை ஒரு குறிப்பிட்ட சாதிப் பிரிவினர் பின் தங்கிய நிலையிலிருந்து மீண்டிருந்தாலோ அல்லது குறிப்பிட்ட மக்கள் பிரிவினரின் பின் தங்கிய நிலை கண்டறியப்பட்டாலும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை அதற்குத்தக திருத்தி அமைக்க சாதிவாரிக் கணக்கீடு அவசியமாகிறது.

1991 ஆம் ஆண்டு முதல் மதுலிமாயி போன்ற பல்வேறு மூத்த தலைவர்கள் சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தி வழக்குகள் தொடுத்து வந்துள்னர். இப்போது சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு விண்ணப்பத்திலேயே எளிய வழி உண்டு. ஏற்கனவே 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் குடும்பவாரியான சமூகத் தன்மை பற்றிய பிரிவில் குடும்பத் தலைவர் சார்ந்துள்ள சாதி / சமுதாயம் பற்றிய கேள்வியில் “பட்டியலின சாதி அல்லது பழங்குடியினர்” எனில் குறியீட்டெண்ணைப் பதிவு செய்யுமாறு அச்சிடப்பட்டிருந்தது. அதில் “பட்டியலின சாதி / பழங்குடி / பிற்படுத்தப்பட்டவர்” என சிறு திருத்தம் செய்தாலே போதும்.

பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படும் குடிநாயக அரசான இந்திய அரசு, நாட்டு மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினராக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்கும், மேம்பாட்டுக்குமான திட்டங்களை தீட்டுவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் வாய்ப்பாகவும்,எழுபது ஆண்டு களாக தவிர்க்கப்பட்டு வந்துள்ள சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளுவதன் வழியாக உரிய சமூகநீதி வழங்க எளிதாக அமையும் என்பதால்தான் பெரியார் திராவிடர் கழகம் சாதி வாரிக் கணக்கெடுப்பை வற்புறுத்துகிறது.

- கொளத்தூர் மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

(பெரியார் முழக்கம் மே 2010 இதழில் வெளியான கட்டுரை

நம்மாளா ????

 



எதிர் வீட்டு
சரசு மக ஓடிப் போயிட்டா...
பையன் நம்மாளா ????

நம்மூர் பேங்குக்கு
புது மேனேசரு....
எப்படி நம்மாளா ????

ரொம்ப நாளா
கேட்கனுமினிருந்தேன்....
தம்பி நம்மாளா ????

வசதி இல்லைனா
தொலஞ்சி போகுது .....
பொண்னு நம்மாளா ????



அய்யா நாங்க
கணக்கெடுக்க வந்திருக்குறோம்
நீங்க எந்த சாதி......

அய்யோ...அநியாயம்.....
அரசாங்கம் சாதி கேக்குது !!!!!!!
Posted by Picasa

May 13, 2010

ஆடகள் தேவை.....

 



ஆடகள் தேவை

SRINIVASA IYANGAR SPETIC TANK CLEANING SERVICE


என்ற பெயரில் இயங்கவுள்ள எங்கள் நிறுவனத்இற்கு ஆட்கள் தேவை, மிக அதி நவின கருவிகள் எதுவும் இல்லாத காரணத்தால் அதீத அறிவை பிறப்பிலேயே பெற்ற பார்ப்பனர்கள் வேலைக்கு தேவை...

மிக முக்கியமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சட்டத்தாலும் நீண்ட காலமாக தகுதி திறமைக்கு உலை வைக்கும் இட ஒதுக்கீடால் பாதிக்கப்பட்டு சோத்துக்கே... ......... இருப்பவர்களுக்கு முன்னுரிமை அழிக்கப்படும்.......

என்ன ஒரே குறை பாதி தேங்காய் எடுத்துப்போய் சட்னி ஆட்ட முடியாது ஆட்டின நாறிடும் மாமோய்ய்ய்ய்.....
Posted by Picasa

Mar 31, 2010

அங்காடித் தெரு

 



படம் இங்கே பதிவு கீழே....
Posted by Picasa

அங்காடித் தெரு- அரோக்கியமான திரைப்படத்திற்கான பாதை...

கடந்த 6 மாதங்களுக்கு முன் சாலை ஓரங்களில் இந்தியா மேப் விற்பவர் ஒருவர் என்னிடம் தம்பி காலையிலிருந்து போணியாகலை வாங்கிக்குங்க தம்பி என்ற போது வாங்கி மாட்டிய தமிழ் நாடு வரைபடத்தையும்,

கோவை ராச வீதியில் பெரிய கடை ஒன்றில் அம்மா வாங்கி வந்த சட்டையையும்

மேலாடை கிழிந்து போன சிறுவன் ஒருவனிடம் வாங்கிய டீ.வி ரிமோட்டையும்

வெறித்து பார்த்த படி வெகு நேரம் அமர்ந்திருந்தேன், ஆம் நான் வசந்த பாலனின் அங்காடித் தெருவில் நுழைந்து வந்த பின் தான் இப்படி ஆயிற்று.

இணையங்களில் பரவலாக பார்த்த விமர்சனங்களும் இயக்குநரின் முந்தைய படைப்பான வெயிலுமே இக்கோடை வெயிலிலும் ஆர்வமாக படத்தை பார்க்க தூண்டியது.

சாமான்ய மக்களின் வாழ்க்கையை பற்றிய எத்துனையோ படங்களைத் தாண்டியும் அங்காடித் தெரு நம்மை ஈர்க்க காரணம் கொடிது கொடிது இளமையில் வறுமை என்பதை திரையில் சொல்லிய விதமே.

இந்திய சூழல் நமக்கு தந்திருக்கிற குடும்ப அமைப்பு முறை அது சார்ந்திருக்கும் சிக்கல்கள் சிறு வயதில் குடும்ப பாரம் சுமக்கும் நாட்டின் மிக பெரும்பான்மையான கல்வி வசதி அற்ற கடைக்கோடி கிராமத்தின் இளசுகளை கதாபாத்திரமாக்கி பெரு நகரங்களில் அவர்களின் இளமையையும் இரத்தத்தையும் உறிஞ்சுகிற அடுக்குமாடி கடையை களமாக்கியதே அங்காடித் தெரு

அத்தெருவில் இறங்கி நடந்தபோது,

பருவம் அடைந்த வேலைக்கார சிறுமியை வீட்டன் பின் புறத்தில் நாயோடு அடைத்து வைத்திருக்கும் பார்ப்பன பெண் இந்தாம்மா மாமா மடி ஆச்சாரமெல்லாம் பார்க்கிறவா அவளை கூட்டி போய் தீட்டு கழித்து வா என்ற போது அப்பெண்னையை வரவழைத்து நீராட்டுகிற சூத்திர சாமி என மத இல்லை மட நம்பிக்கைகளின் மேல் சம்மட்டி அடி வைத்திருக்கிறார் இயக்குநர்.

பார்வையற்ற வியாபாரி, கழிவறையில் கட்டணம் வசூலிக்கும் ஆள், குள்ள மனிதரைக் கைப்பிடித்துக் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண் என ஒரே தெருவில் பல விதமான வாழ்க்கைகளைத் தொட்டுச் செல்லும் இடங்கள் நெகிழச் செய்யும் காட்சிகள் அட்டா நல்ல கவிதை ...

மசாலா படங்கள் கதை நாயகனுக்கான பஞ்ச் என அரை நிர்வானமாகத் திரியும் இயக்குநர்கள் வசந்தபாலனின் அங்காடித் தெருவுக்கு போய் நல்லதா 4 சட்டை வாங்கி போடுங்கப்பா...

Mar 15, 2010

வேருக்காய் விசும்பும் பூக்கள் ....

 


ஈழத்தமிழ் மாணவர் தோழர்.அபிதவன் அவர்களின் வேருக்காய் விசும்பும் பூக்கள் என்ற கவிதை தொகுதியின் வெளியீட்டு விழா நேற்று (14-3-10 ஞாயிறு) காலை 10 மணியளவில் கோவை பெரியார் படிப்பகத்தில் என்னுடைய தலமையில் நடைபெற்றது தமிழறிஞர் கோவை. ஞாநி அவர்கள் நூலை வெளியிட கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள் பெற்றுக்கொண்டார் விழாவில் நூல் பற்றிய மதிப்புரையை கவிஞர்.அறிவன் அவர்களும் ஓவியர் கல்பனா நாகராசு மற்றும் கழகத்தின் ஆட்சிக்கழு உறுப்பினர் வே.ஆறுச்சாமி ஆகியோர் வழங்கினர்.

ஈழத்தமிழரின் சோகங்களையும் வலிகளையும் அழகாய் பிரதிபலித்த இந்நூலை எழுதியவர் ஈழ மாணவர் அபிதவன் கோவை நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வருகிறார்.நல்ல தமிழில் அழகாய் நேர்த்தியாகவும் தன் முதல் பதிவை பதித்துள்ள அபிதவனின் எழுத்துக்கள் ஈழ மற்றும் தமிழக மக்களால் என்றும் போற்றப்படும்

விழாவிற்கு ஈழ மாணவர்கள் பெரியார் தி.க வினர் என 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்
Posted by Picasa

ராசிக்கல் " சேசாசலம்

 



ரியாத்: பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாக அறிவித்துள்ளார்.

இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார்தாசன்.

திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார்.

புகழ்பெற்ற மேடைப் பேச்சாளரான இவர் பாரதிராஜாவின் திரைப்படமான கருத்தம்மாவில் நடித்தார். தொடர்ந்து பல படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டார்.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.

தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர் புனித மக்கா சென்று உம்ரா நிறைவேற்றுகிறார்.

ஒரு மதமும் வேண்டாம் - தம்பி

உண்மை உடையார்க்கே



பெரு மதங்கள் என்னும் - அந்தப்

பேய் பிடிக்க வேண்டாம்

பாவேந்தர்


கருத்தம்மா எனக்கோர் உண்மை தெரிஞ்சாகனும்
Posted by Picasa

Mar 5, 2010

வாழும் போதும் வாழ்க்கைக்கு பிறகும்....

 



வாழும் போதும் வாழ்க்கைக்கு பிறகும் என காப்பீட்டு துறையின் பிரபலமான வாசகம் ஒன்று உள்ளது, அதைப்போல வாழ்ந்து மறைந்த பெரியார் தொண்டர் கோவை மாவட்டம் இருகூர் தோழர் சிவராசு அவரது முதலாமாண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டமானது அவரது மகன் சி.உமாசங்கர் (வயது 13 - 8 ம் வகுப்பு அரசு பள்ளியில் பயின்று வருகிறார்) கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியாக நடை பெற உள்ளது...

தான் வாழ்ந்த காலத்தில் நடுத்தர வர்க்க குடும்ப சூழ்நிலையிலும் பெரும் பொருளாதார நெருக்கடியிலும் தாய் தமிழ் பள்ளி நடத்தி வந்த தோழர் சிவராசு தன் 52 ம் அகவையில் காலமானார்.

மற்ற செய்திகள் நிகழ்ச்சிக்கு (07.03.2010 ஞாயிறு) பின்....
Posted by Picasa

Mar 3, 2010

கதவை திற கொசு வரும்...

 

 



அன்று கீதா உபதேசம் செய்தவன் கண்னபிரான் பிறகு கோபியரோடு கொஞ்சி மகிழ்ந்தார்.

இன்று கீதா உபதேசம் செய்பவன் சாமியார் நித்தியானந்தா பிறகு நடிகையோடு கொஞ்சி மகிழ்கிறார்.

ஆக முதலில் கண்னபிரானை கைது செய்யுங்கள் பிறகு எங்க சிங்கத்து மேல கை வைங்க.....

குரு வழியில் நடக்கும் சீடனுக்கு எத்தனை சோதணைகளடா??
Posted by Picasa

Mar 2, 2010

சுவாமி நித்தியானந்தா ???????

 



அட, இப்பத்தான் சன் செய்திகள் தொலைக்காட்சியில் சாமியார் நித்தியானந்தா பற்றி செய்தி வந்தது உடனே அந்தளை கைது செய்யனுமெனவும் ஆசிரமத்தை அடித்தும் சுவரொட்டியை கிழித்தும் தங்களின் எதிர்ப்பை காட்டியுள்ளனர் சிலர்...

நம்முடைய கேள்வியெல்லாம் சுவாமிச்சீ அவர்கள் என்ன தப்பு புதுசா செஞ்சுட்டாரு என்பதுதான் வீடியோ காட்சிகளை பார்த்தால் அந்த ர நடிகையை சுவாமிச்சீ கட்டாயபடுத்தவில்லை என்பது தெரிகிறது ஆக வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் தங்களின் விருப்பங்களோடு இச்சைகளை தீர்த்துக்கொள்வது எப்படி தப்பாகும்..

சரி அப்ப தப்பு எங்கதாங்க இருக்குது நம் தமிழ் மக்களின் எண்ணங்களில் தான், ஆம் எவன் சாமியாருன்னு வந்தாலும் அவன் முற்றும் துறந்தவன், கடவுளுக்கு நேரடி புரோக்கருன்னு அவன் பின்னடி போற எண்ணங்களில் தான் தவறு, என் இனிய தமிழ் சொந்தங்களே அதை நிறுத்துங்கள் எல்லாம் சரியாகி விடும்......

சுவாமிச்சீயை பொறுத்தவரை எது நடந்ததோ(மாத்திரை போட்ட பின்னாடி) அது நன்றாகவே நடந்தது...

சுவாமிச்சீயை அவமானப்படுத்தும் முக்கியமாக இந்து மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக ஏதாவது செய்தால் நாங்கள் சும்மா பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்...
Posted by Picasa

Feb 10, 2010

கருந்திணை பற்றி....

தோழர் அதிஅசுரனின் கருந்திணை பற்றி...

http://thozharperiyar.blogspot.com/2010/02/blog-post.html

கடைசிகாலத்தில் சொந்த ஜாதிக்காரனின் தயவு வேண்டும்’ என்பதற்காக வாழ்நாளெல்லாம் தாம் பேசிவந்த கருத்துக்களுக்கு மாற்றான காரியங்களைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு பெரியார் தொண்டர்கள் ஆளாகி றார்கள். பெரியார் இயக்கங்களில் தீவிரமாக பணியாற்றும் தோழர்கள்கூட தமது வாரிசுகளின் எதிர்காலத்தை எண்ணி பயந்து தம் இல்லங்களில் காதுகுத்து, கருமாதி, பூப்புனிதநீராட்டுவிழா, தாய்மாமன் சீர், பங்காளிச்சீர், மொய் முறைகளை செய்திட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்.

ஒரு இந்து கடைசிவரை இந்துவாகவே வாழமுடிகிறது. தனது வாரிசுகளை இந்துவாகவே உருவாக்க முடிகிறது. ஒரு கிறிஸ்துவராலும், இஸ்லாமியராலும் தனது மதத்தை இறுதிவரைப் பின்பற்ற முடிகிறது. ஆனால் ஒரு பெரியாரியல்வாதி இறுதிக்காலங்களில் இந்துவாக ஜாதிக்காரனாக மாறவேண்டிய அவலம் உள்ளது.


ஒரு ஆரியன் தான் தனது பண்பாட்டைக் கட்டிக்காப்பது மட்டுமல்லாமல் நமது திராவிடர் பேரினத்தையும் அவனது ஆரியப் பண்பாட்டை பின்பற்றச் செய்து விட்டான். அந்த ஆரியத்துக்கு எதிரான களத்தில் நிற்கும் பெரியார் தொண்டர்களாவது தமது வாழ்விலாவது ஆரியத்துக்கு எதிரான அறிவியல் பண்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தோழர் தங்கள் முயற்சிகளை நான் நன்கறிவேன் கண்டிப்பாக என்னால் முயன்ற உதவிகளை செய்வேன்.

நமது மேற்கூறிய நிலைக்கு அடிப்படை காரணம் என்ன என்று பார்த்தால் இரண்டு மட்டும்தான்
1.மாற்றிக் கொள்ள முடியும் என வெகு மக்களுக்கு தெரியாதது.
2.பகுத்தறிவுவாதிகளாகிய நாம் வெகு தோலைவு செல்ல வேண்டியுள்ளது.

மதவாதிகள் அதிகமாக தனி மனித தேவைகளை பற்றி பேசுகிறார்கள்,நாம் சமூகத்தைப் பற்றி பேசுகிறோம், ஆக தியானத்திற்கு செல்ல தயராக உள்ள மக்கள் போராட்டங்களுக்கு வருவதில்லை,தனக்கு அவசியம் ஏற்படும் போது வரலாம் என்றும் வந்தாலும் அடக்குமுறை கண்டு அஞ்சுபவர்களும் எராளம்.

முதலில் நாம் நமக்கான தெளிவான வாழ்வியல் முறைகளை(ஏற்கனவே உள்ளவை, புதியவை) வகுக்க வேண்டும் வெளி நாட்டு கூற்று ஒன்று உள்ளது 'நாத்திகர்களை ஓர் அமைப்புக்குள் கோண்டுவருவது பூனைகளை ஒன்று திரட்டுவதற்கு ஒப்பானது, ஏனெனில் அவர்கள் சுதந்திர சிந்தனையாளர்கள்'- என்று.

ஒருவனுக்கு இருக்கும் பொய் நம்பிக்கை மன பேதலிப்பு,பல பேருக்கு இருந்தால் அது மதம்,தனி மனிதனை குணமாக்க மருத்துவன் போதும், சமூகத்தை குணமாக்க சமூக மருத்துவர்கள் தேவை, ஆம் அது நாம் தான்.

எந்த ஒரு அமைப்பு மற்றும் செயல் முறைகளில் இருக்கும் குறைகளை(இழிவு,அடிமைத்தனம்) சுட்டிக் காட்டி ஒருவரை மாற்று வழிக்கு வரச் சொல்ல அவ்வழி நெறிப்படுத்தப்பட வேண்டும்.

சரி, இங்கே அடிமைப்பட்டவன் எப்படியுள்ளான் நாம் எப்படியுள்ளோம் ஓர் எடுத்துக்காட்டு
முகூர்த்த நேரம், வாசுது நேரம்,நல்ல நேரம், இவ்வகையான முட்டாள்த்தனமான கட்டுப்பாட்டிலாவது அவர்கள் செயல்களை(இழிவானதை) சரியாக செய்கிறார்கள், ஆனால் நாம் என்ன செய்கிறோம் தோழர்களே இவ்வித கட்டுப்பாடுகள் எதுவுமில்லாமல் நம் செயல்களை(உயர்வானவை) நேரம் தவறி செய்கிறோம், 5 மனிக்கு நிகழ்ச்சி தொடங்க வேண்டுமென்றால் நடத்துபவர்கள் 4 மனி என அழைப்பது வருபவர்கள் 4 மனியின்னா எப்படியும் 6 ஆகி விடும்(போர் களத்திலிருந்தா எதிரியை வீழ்த்த நேரமாகி விட்டதா?) என வருவது.

சற்று நிதானமாக சிந்தியுங்கள் சொந்த வாழ்வில் சரியான நேரத்தை கடைபிடிக்காமல் எப்படி சமூக மாற்றத்தை விரும்ப முடியும்.

ஆக, தோழர்களே கடந்த தலைமுறைகளை பாதுகாப்ப தோடு வரும் நம தலைமுறை பகுத்தறிவுவாதிகள் சமூகத்தோடு ஒன்றி இறுதி வரை கொள்கையோடு வாழவும் விவாதிப்போம்.

பூனைக்கு யார் மணி கட்டுவது பூனைகளே கட்டட்டும் கருந்திணை அதற்கு உதவட்டும்

Jan 18, 2010

மேற்கு வங்க வில்லன்.....

தினமலர் செய்தி
பெற்றோருக்கு தெரியப்படுத்திய பிறகே காதல் திருமணத்தை பதிவு செய்ய முடிவு: மே.வங்கத்தில் புதிய நடைமுறை அமல்
ஜனவரி 10,2010,00:00 IST


கோல்கட்டா:பெற்றோருக்கு தகவல் தெரியப்படுத்திய பிறகே காதல் திருமணத்தை பதிவு செய்யும் விதத்தில் மேற்கு வங்கத்தில் புதிய சட்டவிதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. படிக்கிற காலத்திலோ அல்லது வேலை தேடுகிற காலத்திலோ, இளம் வயதினர் காதல் வயப்பட்டு காதலிக்கின்றனர். மதம் மாறி, இனம் மாறி, தகுதி, அந்தஸ்தை விட்டுக் கொடுத்து காதலிப்பவர்களை பெரும்பாலும் பெற்றோர் ஏற்றுக் கொள்வதில்லை. இதனால், காதலர்கள் தங்களது நண்பர்கள் அல்லது உறவினர் துணையுடன் சாட்சி கையெழுத்து போட்டு, போலியான சான்றுகளை அளித்து, திருமணம் செய்து கொள்கின்றனர்.
இப்படி திருமணம் செய்யும் பலரது வாழ்க்கை நிலைப்பது இல்லை. வாழ்க்கையில் பல பிரச்னைகளை சந்திக்கின்றனர். சமயத்தில் தற்கொலைகள் கூட நடக்கின்றன. இதைத் தடுக்கும் விதத்தில் மேற்கு வங்கச் சட்டம் மற்றும் நீதித்துறை, திருமண சட்டத்தில் புதிய திருத்தங்களை செய்துள்ளது.அதன்படி காதலர்கள் பதிவு திருமண விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது, அவர்களது சமீபத்திய புகைப் படங்களை அளிக்கவேண்டும். பெற் றோர் அல்லது பாதுகாவலரின் பெயர், முகவரி பற்றிய அசல் சான்றுகளை சமர்ப்பிக்கவேண்டும். காதலர்கள் ஜோடியாக எடுத்த புகைப்படத்தை இணைக்கவேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளது.
இந்த ஆவணங்கள் அனைத்தையும் பெற்ற பின்னர், கடிதம் மூலம் பெற்றோரது சம்மதத்தை கோருகிறது, அவர்கள் சம்மதம் கிடைத்த பின்னரே திருமணத்தை பதிவு செய்கிறது. இப்படி பல விதிமுறைகளை வகுத்துள்ளது.அரசின் இந்த முடிவு குறித்து, மாநில சட்ட அமைச்சர் மொய்த்ரா கூறுகையில், காதலர்கள் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, பெற் றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கின்றனர். பின்னர் பல எதிர்மறையான விளைவுகளை சந் திக்கின்றனர். ஏற்கனவே, இது போன்று பல நடந்துள்ளன. அதை தடுக்கும் விதத்தில் இந்த திருத்தங் கள் செய்யப்பட்டுள்ளன' என்று கூறினார்.



பார்த்தீங்களா!!!
என்ன கொடுமை சரவணன் இது??
பொது உரிமை வராத நாட்டில எப்படி பொதுவுடமை வரும்?
நீங்க எத்தனைதான்
நியாயமான காரணம் சொன்னாலும் மிகப்பெரிய அநியாயங்க இது, குசராத்தில் இச்சட்டத்தை இயற்றியிருந்தால் சரி கலாச்சார காவலர்கள் அப்படித்தான் பண்னுவாங்க சொல்லி ஆறுதல் அடைந்திருக்கலாம், அருவாளில் கழுத்தை அறுத்து சுத்தியை தலையில போட் காதல் ரோசாக்கள் என்ன செய்யும் பாவம்....

காதல் திருமணங்களில் மணமுறிவு அதிகம் என்ற கருத்து பொதுவாகவே நிலவி வருகிறது. நன்றாக மனது ஒத்துப்பொகும் இருவர் மட்டும் எடுக்கும் முடிவே காதல் திருமணங்கள்,அவர்களுக்குள் ஏற்படும் மணமுறிவும் அவர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது அதற்கான காரணியாக இம்முட்டாள் சமுகத்தின் அழுத்தம் வேண்டுமாணால் காரணமாக இருக்கலாம்.

சமிபத்தில் வெளியான நாடோடிகள் என்ற திரைப்படத்தில் கூட இதே போன்ற நச்சு கருத்து விதைக்கப்பட்டிருக்கும், பிரிந்து வாழும் காதல் இணைகளை நண்பர்கள் கட்டாயமாக இணைப்பார்கள் எனென்றால் அவர்களை நண்பர்களே பல்வேறு இழப்புகள் மூலம் சேர்த்திருப்பார்கள், இப்ப நம்ம கேள்வியேல்லாம் பெற்றோர்களால் நடத்தப்படும் திருமணங்களில் பிரிந்து வாழும் இணைகளை சேர்க்க பந்தல்காரன்,சமையல்காரன்,கேடிப்பயல்கள் ராகு,கேது அதைச் சொல்லும் சோதிடன்,பிச்சை வாங்கிய பார்ப்பான் என எல்லோரும் வருவார்களா ? என்பதே!!!

இந்த பெற்றோர்கள் எத்துகிட்டா அப்பறம் எதுக்கு பதிவு அலுவலகம் வர்றாங்க? அப்பறம் இந்த மேசர்,மைனர் இதெல்லாம் என்னங்க? சரி,போலி ஆவணங்களை பெற்றோர் தருவதில்லையா? பல சாதி வெறியர்கள் சாதிக்காக வயதை குறைத்து சொல்வதை அறிந்திருக்கிறோம்., இணைகளின் பெற்றோர்களை உறுதி செய்ய டி.என்.எ சோதனையும் செய்யுமா வங்க அரசு?




இதே நிலமை நம்மளுக்கு நாளைக்கு வராமல் இருக்க நாம் செய்ய வேண்டியதென்ன..

தமிழ்நாட்டில பாருங்க யாரும் சாதி பேர தன் பெயருக்கு பின்ன போடுவதில்லை என மேடைகளில் முழங்காமல் சாதி மறுப்பு திருமணங்கள் அதிகமாக நடக்க வைக்க வேண்டும்....அதற்காய்,

1.சாதி மறுத்து திருமணங்கள் செய்பவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்..

2.சாதி மறுத்து திருமணம் புரிபவர்களின் வாரிசுகளை சாதியற்றவர்கள் என பதிவு செய்யச் சொல்லி அவர்களுக்கென தனி இட ஒதுக்கீடு கல்வியில் தர வேண்டும்.

3.சாதி மறுப்பு திருமணங்களுக்கு தடை செய்பவர்களை தே.பா சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

4.தமிழ் பெயர் வைத்தால் வரி விலக்களிப்பது போல் இவர்களுக்கு தனி குடும்ப அட்டை கொடுத்து வரிகள் இல்லாது எல்லாப் பொருட்களும் தர வேண்டும்.

5.கல்விக்கடன்,வீட்டுக்கடன்,மற்ற வங்கி பரிமாற்றங்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் தரப்பட வேண்டும்

தோழர்களே!! இந்த 5 கோரிக்கைகள் சும்மா சாம்பிள் தான் இது போல உங்களுக்கும் தோணும் கோரிக்கைகளை சேருங்கள் இதை ஒரு இயக்கமாக்கி வரும் பிப் 14 காதலர் திணத்தன்று அரசுக்கு அனுப்பலாம்...