Oct 2, 2011

வாகை சூட வா....

 


நீங்கெல்லாம் திருந்தவேமாட்டிங்களா.... களவானி இயக்குநரின் அடுத்த படைப்பு அப்படின்னு போனா திரையில தெரியிற நம்பியாரை சுடுவது முருங்கை காயுடன் நுழையும் பாக்கியராசுனு ஒரே கலக்கல் தான் போங்கன்னு பார்த்தா கண்டேடுத்தான் காடு செங்கல் சூளை.....நீங்கெல்லாம் திருந்தவேமாட்டிங்களா..

செங்கல் புழுதியில ஒரு குத்து பாட்டு பைட்டு அப்படின்னு போடாமா சின்னபுள்ள தனமா ஆடு,மீனு,குளம் குருவின்னு யாருங்க கேட்டா மண் கலச்சாரம் மொழி வாழ்வியல் பற்றியெல்லாம்....நீங்கெல்லாம் திருந்தவேமாட்டிங்களா..

ஒலகம் போற வேகத்தில நாங்கெல்லாம் கார்பரேட் துணையுடன் உண்னாவிரதம் நேரத்தில குழந்தை தொழிலாளர் கல்வி அப்படின்னு 1960 மேட்டர்களை பேசிட்டு,சரி போணப்போகுதுன்னு பார்த்த "காசு கொடுக்கின்ற எல்லோரையும் சாமி என்று நினைத்து விடாதீர்கள் , அவனும் ஒரு முதலாளி தான் " எப்படி இயக்குநரே இதுவா புரட்சி உங்களுக்கெல்லாம் ஒண்னுமே தெரியல புரட்சின்னா 10 பக்கம் வசணம் பேசனும் அப்படியே அடுத்த சீன்ல ஒரு அயிட்டம் சாங்கு இதுதாங்க புரட்சி

அட அது கூட இல்லையின்னா அந்த செங்கல் சூளை முதலாளி கிட்ட கொள்ளை அடிச்சு கதைநாயகன் ஒரு பள்ளிக்கூடம் கட்டியிருக்கலாம்....அதென்னங்க பாட்டு செங்கல் சூளைக்காரா,தஞ்சாவூரு மாடத்தின்னு கேட்டா மண் மணம் அப்படின்னு சொல்வீங்க .....நீங்கெல்லாம் திருந்தவேமாட்டிங்களா..

என்னவோ போங்க நல்ல சூதானமா பொழைச்சக்குங்க.... ஆனா ஒன்னூங்க.....
விதைச்சுட்டிங்க...
அறுவடை பண்னுடிவீங்க....
நல்ல இயக்குநர்,தரமான படம் அப்படின்னு....
வாகை சூடியாச்சுங்க .....
தொடர்ந்து சற்குணத்துடம் இது போன்ற படங்களையே எதிர் பாக்கும்......
Posted by Picasa

No comments:

Post a Comment