Dec 6, 2009

சமச்சீரும் மதவாதியும்...


சமச்சீர் கல்வித் திட்டத்தில் இந்து விரோத பாடத் திட்டங்களை திணிக்கக் கூடாது என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் எச்சரித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சமச்சீர் கல்வியில் முதலமைச்சர் ஆர்வம் காட்டும் போதே சந்தேகம் எழுந்தது. எல்லோருக்கும் ஒரே கல்வி என்ற பெயரில் இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களைத் திணிக்கவே இந்த தகிடுதத்தம் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்து விட்டது. இதை வரைவுத் திட்ட அளவிலேயே இந்து முன்னணி கடுமையாக எதிர்க்கிறது.மக்களால் புறந்தள்ளப்பட்ட ஈ.வெ.ரா.வின் இந்து விரோதக் கொள்கையைத் தூக்கிப் பிடிக்க முதலமைச்சர் முயல்கிறார். மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டு தோற்றுப் போன நாத்திகப் புலம்பலைக் கல்வி என்ற பெயரில் மாணவர்களிடம் திணிக்க சதி செய்கின்றனர் தி.மு.க.வும் அதன் தலைவரும். சமச்சீர் கல்வி என்பது கல்வித் திட்டத்திலும் இருக்கும் நல்ல கருத்துக்களை ஒருங்கிணைப்பது என்ற பசப்பு வார்த்தையைக் கூறிய கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வரைவுத் திட்டத்திலேயே இந்து மதத்தைக் கேவலப்படுத்தும் அவலத்தை வெளியிட்டுள்ளார்.மூன்றாம் வகுப்பு பாடத்தில் ஈ.வெ.ரா.வின் தாக்கம், நான்கில் மறுமலர்ச்சிப் பாடல்கள், விழிப்புணர்வு பாடல்கள், ஐந்தில் மூட நம்பிக்கை, ஆறில் கட்டுக்கதை, எழில் அன்னை தெரசா சேவை, சமூக அறிவியலில் இஸ்லாமியர் வருகை, எட்டில் விழாக்கள் அவசியமா? ஒன்பதில் ஆற்றுச் சமவெளி நாகரிகம் இதில் கிறிஸ்தவமும், ஜுடோயிசமும் வருகிறது. அலகு2 இடைக்காலம் நிலமானிய முறைதிருச்சபையின் பங்கு, இஸ்லாமியர் நன்கொடை, பத்தாம் வகுப்பில் ஈ.வெ.ரா.வின் விழிப்புணர்வு சிந்தனை. என்னவிதமான சமச்சீர் கல்வி இது?


மாமா நம்ம கவலை நியாயம்தானுங்க,

இப்படியெல்லாம் வருங்கால தூண்களுக்கு சொல்லி கொடுத்தா அப்பறம் எங்களக்கெங்கே அடிமைகள்?சரி அதெல்லாம் இருக்கட்டும் இதற்கெதற்கு அரசாங்கத்தை எச்சரிச்சுட்டு,நமக்கு வசதியா மூன்றாம் வகுப்பில் கண்ணன் வெண்னெய் திருடுனது, ஐந்தில் ராமன் வில்லை வளைத்தது, எட்டில் விநாயகன் பால் குடிச்சது,பத்தாம் வகுப்பில் அறிவியலில் கடலுக்கடயில் பாலம் கட்டுவதெப்படி,அப்பறம் பாலியல் கல்வி அவசியமுன்னு முற்போக்குவாதிகள் சத்தம் போடறாங்க அதிலெயும் எதாவது உருப்படியா செய்வதற்கு முன்னடி கோபியர் லீலை,100 மனைவி சமாளிப்பதெப்படின்னு நம்ம அயிட்டங்களை எடுத்து விடனும்.இதுக்கு போராட்டமெல்லாம் வேண்டாங்க அதுதான் நமம ஆத்தா சரசுவதி தாமரையில் சும்மாதானே உட்கார்ந்திருக்காங்க அவங்களுக்கு ஒரு கோமம் போடுவோமா பேசா......
Posted by Picasa

No comments:

Post a Comment