Mar 5, 2010

வாழும் போதும் வாழ்க்கைக்கு பிறகும்....

 



வாழும் போதும் வாழ்க்கைக்கு பிறகும் என காப்பீட்டு துறையின் பிரபலமான வாசகம் ஒன்று உள்ளது, அதைப்போல வாழ்ந்து மறைந்த பெரியார் தொண்டர் கோவை மாவட்டம் இருகூர் தோழர் சிவராசு அவரது முதலாமாண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டமானது அவரது மகன் சி.உமாசங்கர் (வயது 13 - 8 ம் வகுப்பு அரசு பள்ளியில் பயின்று வருகிறார்) கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியாக நடை பெற உள்ளது...

தான் வாழ்ந்த காலத்தில் நடுத்தர வர்க்க குடும்ப சூழ்நிலையிலும் பெரும் பொருளாதார நெருக்கடியிலும் தாய் தமிழ் பள்ளி நடத்தி வந்த தோழர் சிவராசு தன் 52 ம் அகவையில் காலமானார்.

மற்ற செய்திகள் நிகழ்ச்சிக்கு (07.03.2010 ஞாயிறு) பின்....
Posted by Picasa

No comments:

Post a Comment