Mar 15, 2010

வேருக்காய் விசும்பும் பூக்கள் ....

 


ஈழத்தமிழ் மாணவர் தோழர்.அபிதவன் அவர்களின் வேருக்காய் விசும்பும் பூக்கள் என்ற கவிதை தொகுதியின் வெளியீட்டு விழா நேற்று (14-3-10 ஞாயிறு) காலை 10 மணியளவில் கோவை பெரியார் படிப்பகத்தில் என்னுடைய தலமையில் நடைபெற்றது தமிழறிஞர் கோவை. ஞாநி அவர்கள் நூலை வெளியிட கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள் பெற்றுக்கொண்டார் விழாவில் நூல் பற்றிய மதிப்புரையை கவிஞர்.அறிவன் அவர்களும் ஓவியர் கல்பனா நாகராசு மற்றும் கழகத்தின் ஆட்சிக்கழு உறுப்பினர் வே.ஆறுச்சாமி ஆகியோர் வழங்கினர்.

ஈழத்தமிழரின் சோகங்களையும் வலிகளையும் அழகாய் பிரதிபலித்த இந்நூலை எழுதியவர் ஈழ மாணவர் அபிதவன் கோவை நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வருகிறார்.நல்ல தமிழில் அழகாய் நேர்த்தியாகவும் தன் முதல் பதிவை பதித்துள்ள அபிதவனின் எழுத்துக்கள் ஈழ மற்றும் தமிழக மக்களால் என்றும் போற்றப்படும்

விழாவிற்கு ஈழ மாணவர்கள் பெரியார் தி.க வினர் என 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்
Posted by Picasa

No comments:

Post a Comment