Feb 27, 2009

ஓ போடுங்கோ.....

வணக்கம்

வேதம் படித்த ஞாநிக்கு....

பெரியார் பேரன் எழுதும் மடல்,தமிழ்நாட்டில் எந்த திராவிட இயக்கங்களும் செய்யாத ஓன்று நீங்கள் செய்திருந்தீர்கள் நீங்கள் இயக்கிய தந்தைபெரியார் பற்றிய ஆவணப்படம் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதை, ஊர் ஊராக தூக்கி சுமந்து எங்கள் தோழர்கள் வாயிலாக பரப்பினார்கள் எல்லாம் அறிவோம்.

பிற்கெதற்கு வேதம் படித்த ஞாநி என்று எழதியிருக்கிறேன் என யேசிக்காலம், எங்கள் அய்யா சொல்லியிருக்கிறhர் ஆட்டு மூளை கூட உணக்காக சிந்திக்கும் ஆனால் ஆரிய மூளை சிந்திக்காது என அக்கூற்று இன்றும்100ஆண்டுகள் கழித்தாலும் உயிருடன் இருக்கும் என்பதற்கு உங்களை போன்றவர்களே நிகழ்கால சாட்சி……

‘சு’ப்ரமணிய பாரதியின் வாரிசுகள் நீங்கள், இதை அந்த கண்ணோட்டத்தில் பார்க்கவும் அதை இந்த கண்ணோட்டத்தில் பார்க்கனும், இவன் அப்படி, அவன் இப்படி, அப்புறம் நீங்க பேசற முற்போக்க கேட்ட நாங்கெல்லாம் தோத்தோம் போங்க…… அதுக்காக நீங்க முற்போக்கு பேச வேண்டாமுன்றுனு சொல்லலை ரொம்ப பிற்போக்குத்தனமா எழதீட்டு அதுக்கு முற்போக்கு முகமுடி போடாதீங்க….

பொதுவா உங்கள் முரன்பாடுகளை பத்தி சொன்னா இக்கட்டுரை போதாது ஆக விசயத்துக்கு வருவோம, குமுதம் இதழ்ல நீங்க எழதுற ‘ஓ’ பக்கங்கள் பகுதியில் இந்தவார கேள்வி அப்படினு ஒன்று கேட்டிங்;களே….


அதைப்பத்தி தான் பேசனும்

எனக்கு போதுவா, எப்பவுமே நீங்க கேள்வி கேட்கறப்ப ‘திருவிளையாடல்’ படம் தான் நினைவுக்கு வரும், தருமயிடம் சிவன் கேள்விகளை நீ கேட்கிறாயா ?அல்லது நான் கேட்கட்டுமா? என்றவுடன் தரும் அவரசமாக இல்லை நானே கேக்கறேன்.... எனக்கு கேட்க மட்டும ;தெரியும்என்பாரே அதுபோல தங்களுக்கு கேட்கமட்டு தான் தெரியும் என் அடிக்கடி நிருப்பித்து விடுகிறீர்கள்....

எங்கள் தோழர்களின் பார்வைக்கு உங்கள் கேள்வி...




பெரியார் திராவிடர் கழகத்தலைவரும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளருமான கொளத்துர் மணி“ ராஜுவ் காந்தி கொலை செய்யப்படவில்லை. அவருக்குத் தரப்பட்டது மரண தண்டனை. உண்மையில் நாட்டுப்பற்று உள்ள இந்தியன், சமூக நீதி கோரும் பிற்படுத்தப்பட்டவன் எவனாவது ராஜுவ் காந்திக்கு மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். நாம் செய்யத்தவறியதை ஈழத்தமிழன் ஒருவன் செய்தபோது நாம் உண்மையில் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். ஏனென்றால்6000 பேரைக் கொன்ற, 1000 பெண்களை பாலியல் வல்லாங்கு செய்த இந்திய அமைதிப்படையை ஈழத்துக்கு அனுப்பியவன் ராஜுவ் காந்தி. துடிக்காதா நெஞ்சம் ? ஒரு ஈழத்தமிழன் செய்திருந்தால் அது நியாயம். விடுதலைப்புலிகள் செய்திருக்காவிட்டால் அது குற்றம். செய்து இருந்தால் பாராட்டுகிறேhம். இல்லையென்றால் கண்டிக்கிறேhம் என்று நாம் பேசியிருக்க வேண்டும்” என்று பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

ராஜுவ் செய்த ‘குற்ற’த்துக்காக விடுதலைப் புலிகள் மரண தண்டனை வழங்கலாம் என்றhல், அந்த ‘குற்ற’த்துக்குத் தொடர்பே இல்லாத இன்னும் இருபது பேரையும் _ஸ்ரீபெரும்புதுரில் கொன்றதற்காக விடுதலைப்புலிகளுக்கு மரண தண்டனை வழங்கலாமா ? அந்த ‘அப்பாவிகள்’ தற்செயலாக செத்தது தவிர்க்க முடியாதது என்று சொல்வீர்களா ? புலிகளுக்கும் ராஜபக்ஷே அரசுக்கும் நடக்கும் போhpல் இடையில் சில அப்பாவித் தமிழர்கள் சாவது தவிர்க்கமுடியாதது என்று ஜெயலலிதா செர்னனதைப் போன்றதுதானே அது ?

குற்றத்துக்கு மரண தண்டனை வழங்குவது சரியென்றால், இந்திய சட்டப்படி குற்றவாளிகளான ராஜுவ் கொலையாளிகளுக்கு விதித்த மரண தண்டனைக்கு எதிராக ஏன் கையெழுத்து இயக்கம் நடத்தினீர்கள் ? ஏன் கருணை மனுக்களை ஆதரிக்கிறீர்கள் ? சில மரண தண்டனைகள் மட்டும் நியாயமானவை ; மற்றவை இருக்கலாம் என்பதுதான் மனித நேயக் கையெழுத்து இயக்கமா ?

முதலில் இவ்வளவு தெளிவாக குட்டையை குழப்பி இருப்பதுக்கு என்னுடைய நன்றி.

நீங்கள் குறிப்பிட்ட தோழர் கொளத்தூர் மணியின் பேச்சு பெரியார் திரவிடர் கழகம் சென்னை சார்பில் m.g.r நகரில் நடத்திய முத்துக்குமார் வீர வணக்க நிகழ்ச்சியில் பேசியது, பொது வாகவே பொதுக்கூட்டங்களில் பேசும் போது வீர அவேசாமாகவே அல்லது உணர்ச்சி வசப்பட்ட நிலையிலே பேசுபவர் அல்ல எங்கள் தோழர் மணி, தான் பேசும் ஒவ்வொரு சொல்லும் மிகச்சரியான ஆதராங்களோடும், ஆய்வுகளோடும் மற்றும் தன் இன நலனுக்காகவும் எப்போதும் பேசுவார். ஆக போகிற போக்கில் காத்து வாக்கில் கேட்டுவிட்டு என்கிட்டேயும் பேனா இருக்குதுனு கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது.

ஞானி, நீங்கள் இக்கேள்வியில் சுட்டிகாட்டாத ஒன்று எப்போதுமே ஈழப்பிரச்சனை பற்றி பேசும்போது நாங்கள் ராஜிவ் கொலையைப்பற்றி பேச மாட்டோம் அதற்கான அவசியமும் எங்களுக்கில்லை ஆனால் இங்குள்ள மக்கள் எழுச்சியை அடக்கும் விதமாக இந்த வோட்டு பொறுக்கிகள் கூறும் குற்றச்சாட்டு ராஜிவ் கொலை. எங்களுக்கோர் சந்தேகம் பொதுவா ஊர்ல யாரவது செத்த 2 வது நாளில் பொதைத்து விடுவோம், மகள் வெளிநாட்டுல பொறுக்க போயிருந்த 3,4 நாள்ல அதிகபட்சமா பொதைத்து விடுவோம், ஆனா இந்த அல்ல‘கை’கள் 18 வருசமா பொதைக்கம அப்பப்ப நாற வைக்கிறhங்க..

அதைத்தான் கூட்டத்தில் ஆரம்பத்திலேயே மணி அவர்கள் - “மறக்கமாட்டோம், மன்னிக்க மாட்டோம் என காங்கிரசால் ஏற்படுத்தபட்ட புண் சீழ் பிடித்து விட்டது, நின்றhல் நடந்தால் வலிக்கிறது ஆக அதை கீற வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது” என்கிறார் ஆக நாங்கள் ராஜிவ் கொலை பற்றி பேச வேண்டி இருந்தது.

தோழர் மணி அவர்கள் தன் உரையில் ராஜிவ் கொலை செய்யப்படவில்லை அவருக்கு தரப்பட்டது மரண தண்டனை என்பதோடு நின்றுவிடாமல் அத்தண்டனையை நிறைவேற்றியிருக்க வேண்டியவர்களை பட்டியல் இடுகிறார்.

நாட்டுப்பற்றுள்ள இந்தியன் (உங்களைப்போல்)
சமூக நீதி கோரும் பிற்படுத்தப்பட்டவர் (எங்களைப்போல்)
பொதுவாக தமிழ்நாடு மக்களிடம் உள்ள கருத்து அதாவது ஏற்படுத்தப்பட்ட கருத்து ராஜிவ் உயிருடன் இருந்திருந்தால் தன் சுட்டுவிரலால் இந்தியாவை தாங்கி நிறுத்தியிருப்பார், இந்நேரம் அமேரிக்கா நம்மிடம் பிச்சை கேட்கும் என்று, ஆனால் உண்மைவேறு, தன் குறுகிய ஆட்சி காலத்தில் வி.பி.சிங் பிரதமராக சாதித்ததை இந்தியாவில் இதுவரை எவரும் செய்ததில்லை இனி யாராவது செய்பவர்கள் என்ற நம்பிக்கையும் இல்லை.

இராஜpவ் தன் ஆட்சிக்காலத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு ஆதராகமாக இருக்கும் இராணுவ தளவாடங்கள் (போபர்ஸ் பீரங்கி) விசயத்தில் எவ்வளவு ஊழல் செய்திருக்கிறார் என ஞானிகளுக்கு தெரியாமல் இல்லை ஆக இக்காரணத்திற்காகவே குற்றவாளியான ராஜிவ் நாட்டுப்பற்றுள்ள இந்தியாவில் மரண தண்டனை அளிக்கபட்டிருக்க வேண்டுமென்கிறார் தோழர் மணி இரண்டாவது பிற்படுத்தப்பட்ட அல்லகை’கள் நிலை சுதந்திர காலத்தில் எப்படி என்பதையும் நாடறியும் (அதற்கு தனிக் கட்டுரை வேண்டும்) ஆக மற்றும் ஒரு முறை கொலை செய்ய வேண்டியவர்கள் சமூக நீதி கோரும் பிற்படுத்தப்பட்டவர்கள்.


நாம் செய்யத்தவறி விட்டோம், ஆனால் தன் இன விடுதலையே உயிர்முடிச்சாக கொண்டு வாழும் மரத்தமிழர் கூட்டம் எனும் தேன் கூட்டை “afterall 2000 boys” என்று வாய்ச்சவடால் விட்டபடி கை வைத்தார் ராஜுவ் அதற்கை கொலை செய்யப்பட்டார்.

ஆகவே தோழர் மணி தன் உரையில் அதை ஈழத்தமிழன் செய்திருந்தால் அது நியாயம் என்கிறhர், நன்றாக கவனியுங்கள் விடுதலைப்புலிகள் செய்திருக்காவிட்டால் அது குற்றம், செய்திருந்தால் பாராட்டுகிறோம் இல்லையேல் கண்டிக்கிறோம் என கடந்த காலங்கள் பேசியிருக்க வேண்டுமென தற்போது பேசியுள்ளார்.

ஆக ராஜிவ்வை கொலை செய்யதது ஈழத்தமிழன் அது நியாயம், ஆனால் அவன் விடுதலை புலியாடூ என்பது நியாயமாக உறுதி செய்யப்படவில்லை (கொலையில் ஈடுபட்டவர்கள்) புலிகள் இயக்கத்தில் அச்சமயம் இல்லை என்பது தகவல்)

மேற்கூறிய தகவல்கள் அடிப்படையிலேயே தோழர் அப்படி பேசியிருக்கிறhர். உங்கள் கேள்வி என்ன

ராஜிவ் செய்த குற்றத்துக்காக புலிகள் தண்டனை வழங்கலாம் என்றால் அக்குற்றத்துக்கு தொடர்பில்லா இருபது பேரை கொன்றதற்கு புலிகளுக்கு தண்டனை வழங்கலாமா ?

நீங்கள் இக்கேள்வியின் மூலம் ராஜிவ் குற்றம் செய்தார் என்பதை ஒப்புக்கொண்டுள்ளீர்கள் ஏனெனில் மற்ற 20 பேரை குற்றவாளிகள் அல்ல என்று சொல்லி உள்ளீர்கள்…(ராஜிவ்வை குற்றவாளி எனச் சொன்ன உங்களை அல்ல ‘கை’கள் பார்த்துக் கொள்வார்கள்).

அடுத்தது தான் உங்கள் உளறளை ஆரம்பித்து உள்ளீர்கள், உங்கள் முதல் கேள்விக்கு எங்கள் பதில் என்ன என்பதை நீங்களே யூகித்து உள்ளீர்கள் உங்கள் பதிலுக்கு மறுபடியும் ஒரு கேள்வி எழுப்பி ஜெயலலிதாவை வம்புக்கு இழுத்துள்ளீர்கள்..

ஞானி அவர்களே உங்கள் மனிதபிமானம் எங்களை வியக்க வைத்துள்ளது, உங்களை போன்றவர்கள் உள்ளதால் தான் 24மணி நேரம் சிhpப்பு மழை பொழிந்து மக்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கி செத்துக்கொண்டிருக்கிறhர்கள்…

தெளிவாக கேளுங்கள், ராஜிவ் கொலை செய்யப்பட்டது ஈழத்தமிழச்சியால் என்றால், ராஜிவ்வின் அமைதி ?!! படை செய்ததன் எதிர்வினை, ஆக அவர் கொல்லப்பட்ட இடம் போர்க்களம் உடன் மடிந்த 20 பேர் கொல்லப்படுவது தவிர்க்க முடியாததது தான், ஆனால் சர்வாதிகாரி ராஜபக்சே அரசின் கொடூர தாக்குதலால் உயிரிழக்கும் அப்பாவி தமிழர்களையும் அந்த 20பேரையும் ஒப்பிடுவது தவறு, இப்படி அறிவுப்பூர்வமாக நடுநிலையுடன் கேள்வி கேட்கும் தாங்கள் உடன் இறந்த 20 பேரில் அல்ல’கை ஓட்டுப் பொறுக்கிகள் யாருமில்லை என உங்கள் மூக்கு இல்லை இல்லை பூதக்கண்ணாடி கொண்டு பார்த்ததுண்டா ?

அடுத்த உங்களின் அறியாமை நிரம்பி வழியும் கேள்வி – குற்றத்துக்காக மரண தண்டனை வழங்குவது சாரியென்றால், இந்தியச்’சட்டப்படி’ குற்றவாளிகளான ராஜிவ் கொலையாளிகளுக்கு விதித்த மரண தண்டனைக்கு எதிராக ஏன் கையெழுத்து இயக்கம் நடத்தினீர்கள் ? கருணை மனுக்களை ஏன் ஆதாpக்கிறீர்கள் ?

ஞாநி அவர்களே ராஜிவ் கொலையாளி ராஜிவ்வுடனே தன்னை மாய்த்துக் கொண்டார்.. உடனிருந்த சிலரும் தங்களை தாங்களே மாய்த்துக் கொண்டார், மீதமிருக்கும் சிலர் சு{ழ்நிலை காரணமாக அந்நிகழ்வில் பங்கேற்றவர்கள் அதை முதலில் புரிந்து கொள்ளங்கள், அவர்கள் மரண தண்டனைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நியாயமானதில்லை என்றால் அவர்களுக்கு சட்டப்படி’ அளிக்கும் மரணம் ;நியாயமானதா? அப்படி நியாயம் என்றால் ஏன் ராஜிவ் மரணத்திற்காக நீலிக்கண்ணீர் வடிக்கிரிர்கள் ?

எங்கள் தோழர் மணி அவர்கள் தன் பேச்சில் “எங்கள் தோழர்கள் சட்டவிரோதமாக கூட நடப்பார்கள்* ஆனால் நியாய விரோதமாக நடக்கமாட்டார்கள் என்பார், ஆக ராஜிவ் கொலை உங்களில் சட்ட விரோதம் ஆனால் எங்களுக்கு நியாயம்...

இதை பக்கம் பக்கமாக எழுதி உங்களுக்கு விளக்கும் அளவுக்கு நீங்கள் எதையும் சாதித்து விடவுமில்லை, நாளைய வரலாறுக்கு பதிவாகவே இக்கட்டுரையை வைக்கிறேhம். வோட்டு பொறுக்கிகள் எல்லாம் அணுசக்கதி ஒப்பந்தத்தை பேசுவதற்கு முன்பாகவே கடந்த feb 2008 லேயே டில்லி சென்று மத்திய அரசுக்கு எதிராக முதன் முதலில் குரல் கொடுத்து பெரியார் திராவிடர் கழகம் அதன் அறுவடை இன்று தமிழநாட்டில், இச்சமயத்தில் உங்கள் ஆராய்ச்சி வேலையெல்லாம் ஆஸ்கார், போயஸ் தோட்டம், கோபாலபுரம் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள், ஈழம் வரை செல்ல வேண்டாம், நாங்கள் பார்த்துக் கொள்கிறேhம், வேண்டுமென்றால் நம் இல்லை இல்லை எங்கள் சொந்தங்களின் ரணங்களை படமெடுங்கள் மறுபடியும் உங்களை ஊர் ஊராக தூக்க தயராக இருக்கிறேhம் அதை விட்டுவிட்டு எதுக்கு வேண்டாத வேலை..

எனக்கொரு சந்தேகம்

கருணாநிதி சரியில்லை, ஜெயலலிதா சரியில்லை, வைகோ சரியில்லை, ராமதாஸ் சரியில்லை, திருமாவளவன் சரியில்லை, பொதுவுடமை வாதிகள் சரியில்லை, பொரியாரியல் வாதிகள் சரியில்லை - இப்படியெல்லாம் வரிசையாக நீங்கள் பிதற்றுவதை பார்த்தால் எனக்கென்னவா நீங்கள் தான் சரியில்லை என்றே தோன்றுகிறது.

தோழர்களே ஞாநிக்கு ஜோரா ஒரு ‘ஓ’ போடுங்க…..

No comments:

Post a Comment