Oct 21, 2009

எதற்கு சிறை...

 


கடந்த மே மாதம் நடந்த இந்திய இரானுவத்தாக்குதலில் கோவை மத்திய சிறை சென்ற போது எங்கள் மனதை பிழிந்தவர் வீரப்பனின் அண்னண் மாதையன் அவரை சிறையில் சந்தித்த போது...

அவரது வயது 81 தனது 60வது வயதில் சிறை பட்டவர் கடந்த 21 ஆண்டுகளாக சிறையில் இருப்பதாக சொன்னார்..
கண் பார்வை மங்கிய நிலையில் காதும் சரியாக கேட்காது...

அய்யா! நீங்க என்ன தப்பு செஞ்சீங்க என்ற எங்களின் கேள்விக்கு 'வீரப்பன் கூடப்பொறந்தது தான் வேறென்ன' 2 பொண்னுக தம்பி எனக்கு ஒவ்வொரு மாப்பிளை மேலயும் பல வழக்குகள் இருக்கு..வக்கீல் படிப்பு முடிச்சுட்டு சென்னையில பயிற்சி எடுத்திடுத்திருந்த ஒரே பையனையும் லாரி விட்டு கொன்னுட்டாங்க..என்ற போது கண்கள் குளமாயின..

கடந்த 3 நாட்களாக விடுதலை செய்ய கோரி உண்னாநிலையில் உள்ளார்..அவருக்கு அதரவாக 21ம் தேதி மாலை பெரியார் தி.க வினர் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்...

எதற்கு ஒருவரை சிறையில் அடைக்க வேண்டுமோ அதையெல்லாம் கடந்த நிலையில் மாதையன் உள்ளார்.ஆக அவரின் மொழியிலேயே சொல்வதென்றால் 'கருணாநிதி மனசு வச்சா கடைசி காலத்துல வெளி உலகத்த பார்த்துட்டு சாவேன்'....மனசு வையுங்க முதல்வரே....
Posted by Picasa

1 comment: