Oct 29, 2009

விட்டாச்சு லீவு...

 


நீதிமன்றம் விசித்திரமான பல வழக்குகளை சந்தித்துள்ளது ஆம் விடுமுறை நாட்களை தவிர்த்த வேலை நாட்களில்....

வழக்கறிஞர் தோழர் ஒருவரின் சந்திப்பின் அவர் பகிர்ந்து கொண்டவையே மேற்கூறிய வரிகளுக்கு காரணம் சரி வாருங்கள் விரிவாய் பார்ப்போம்...

நாட்டில் நடைபெறும் குற்றங்கள் எல்லாம் வாசுது புருசன் எந்திரித்து பல் துலக்குவதைப்போல் நேரம் காலம் பார்த்து நடப்பதில்லை. (என்னது வாசுது புருசன் எங்கிருந்து எந்திரிக்கறானா? அட பூமி பொண்டாட்டி மேல இருந்துதான் அடக்கண்றாவியே ஏ! யாரப்பா அது எழுத வந்த தலைப்பை மாத்திர மாதிரி கேள்வி கேட்பது)....

குற்றவாளிகளை உடனடியாக பிடித்து!!!! கொடுக்கும் காவல்துறையின் வேலை நேரம் 24+7.ஆனாபபாருங்க இந்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குற நி திமன்றங்கள்(மன்னா இது சொற்குற்றமா? பொருற்குற்றமா?) வருடத்தில் எத்துனை நாட்கள் வேலை செய்கின்றன வரும் 2010 ம் ஆண்டில் நீதிமன்றங்களுக்கு 210 நாட்களே வேலை நாட்கள்..

ஆங்கிலேயன் ஆட்சி காலத்தில் அவர்களுக்காகவே எற்படுத்தப்பட்டது இந்த கோடை விடுமுறை.அவன் நாட்டை விட்டு போய் 60 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் இன்னும் இவர்கள் மட்டும் இதை விடவில்லை.நாட்டில் குற்றங்கள் பெருகி விட்ட நிலையில் வழக்குகள் தேங்கி கிடக்கும் நிலையில் நீதிமன்றங்களுக்கு கோடைவிடுமுறை மற்றும் சனிக்கிழமை விடுமுறை தேவைதானா? இதைப்பற்றி விரிவாக விவாதிப்போம் அடுத்தடுத்த தளங்களுக்கு எடுத்து செல்வோம்...

என்னது அந்த 210 நாட்களில் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்தை சேர்க்கலையா?? ம் ம் அது அப்படி இல்லீங்க வழக்கறிஞர்கள் நிறைய சமூக பொறுப்புள்ளவர்கள்(அதென்னவோ தெரியலை கருப்பு சட்டை போட்டாலே இப்படித்தான் போல.அதிலியும் அய்யோஅப்பனுக்கு மாலை போட்டு கேரளாவுக்கு அரிசி கடத்துறவனுகளை விட்டு விடுங்க.) ஈழப்போராட்டம் தமிழகத்தில் தீவிரமடைய அவர்கள் கொடுத்த விலைதான் அவை..அவர்களை தவிர எந்த துறையினரும் இந்தளவு ஒன்று சேர்ந்து போராடவில்லை..

ஆக, வழக்கறிஞர்களே! ஒருமுறை இதையும் சிந்தியுங்கள் தேவைப்பட்டால் சேர்ந்து போராடுவோம்.இல்லாமல் மீண்டும் பள்ளிக்கு போகலாம் பாடிக்கொண்டே சனி,கோடைவிடுமுறை,தீபாவளிக்கு சேர்ந்த மாதிரி என வரிசையாக விடுமுறை எடுத்து கொண்டே போனால்...

என்னது?! ! இராசராச சோழன் பெரிய கோவில் கட்டிய போது வாங்கிய கடன் பத்திர வழக்கு நிலுவையில் உள்ளதா?..

மனுநீதி சோழன் மகன் கொலை வழக்கில் சாட்சி ஆஐராக வில்லையா?

நேரு மீது எட்வினா பிரபு தொடர்ந்த ஈவ் டீசிங் வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வருதா?

இப்படியெல்லாம் ஆச்சரியப்பட வேண்டியிருக்கும்
Posted by Picasa

No comments:

Post a Comment