Nov 3, 2009

ஊரறிந்த ரகசியம்....

 


இந்த வார்த்தைகளை எப்பவாவது பார்க்கவோ படிக்கவோ நேரிட்டால் சற்று நகைச்சுவையாகவும் சிந்திக்க தோன்றும் விதமாகவும் இருக்கும். நமக்கு இந்த வார்த்தையோட வேர கண்டுபிடிக்கற சமச்சாரமெல்லாம் தெரியாது.சும்மா நம்ம அளவுக்கு பார்க்கலாம் வாங்க..

ஊரறிந்த ரகசியம்.....

சின்ன வயசா இருக்கும் போது தூர்தருசனில் போடும் சீரியல்
பேரு ஊரறிந்த ரகசியம்.ஏதோ குட்டி கதைகளை போட்டுட்டு இருந்தாங்க.இப்ப அதில்ல விடயம் அதெப்படி ஊரறிந்தா அது ரகசியமாகும் யாருக்குமே தெரியாம இல்லையில்ல யாரோ சில பேருக்குமட்டும் தெரிஞ்சத்தானே அது ரகசியம்.

அட ஆமாங்க ஊரறிஞ்ச ரகசியம் இருக்குங்க அது என்னன்னா?
இந்தியா இலங்கைக்கு ஆயுத உதவி செய்யவேயில்லை!!!!
இராசிவ் காந்தி கொலையப்ப சுப்பரமணிய சாமி பிறக்கவேயில்லை!!!!!!!
வேற எதாவது இருந்த அவுத்து விடுங்க....

உண்மைக்கதை...

எனுங்க உண்மையா இருந்தா அதெப்படிங்க கதையாகுங்க? கதையா இருந்த அதெப்படி உண்மையாகுங்க? இப்படி போட்டு ரொம்ப நாளா மண்டையை பிச்சுட்டு இருந்தப்பத்தேனுங்க..இப்பத்தானுங்க அதுக்கு விடை கிடச்சதுங்க...

அட! அது என்னன்னா?
இந்திய தமிழ் எம்.பி க்கள் இலங்கை பயணம்.....
முகாமில் உள்ள தமிழர்கள் சொந்த ஊரில் குடியேற்றம்....

இப்படியெல்லாம் போட்டு மண்டையை பிச்சுட்டு வண்டியில போய்கிட்டு இருந்தப்பத்தான் அந்த சுவரொட்டி தட்டுப்பட்டது. ஏ! வீட்டல சொல்லிட்டு வந்துட்டியானு பின்னாடி வந்தவன் சொன்ன போதுதான் சுதாரித்தேன்.அட அதென்ன சுவரொட்டின்னா!! வீரத்துறவி முழங்குகிறாராமே?...

இப்ப மறுபடியும் மண்டையை பிச்சுக்க வேண்டியதுதான்..
ஏம்ப்பா!!! எல்லாத்தையும் துறந்தவன்தான் துறவின்னு கேள்விப்பட்டிருக்கேன் அப்ப வீரமுள்ளவன் எப்படி துறவியாக முடியும்..இல்ல துறவிக்கெப்படி வீரமிருக்கும்...
யாராச்சும் பதில் சொல்லுங்களெப்பா.......
Posted by Picasa

No comments:

Post a Comment