Nov 26, 2009

தம்பியின் கவிதை

 


நாம் அணிவகுத்துள்ளோம்....
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
நாம் அணிவகுத்துள்ளோம்
இழந்த எமது நாட்டை மீட்க
எதிரி எமது நாட்டைவஞ்சகமாக அபகரித்துவிட்டான்!
அதைக்கண்டு நாம் அஞ்சவில்லை!
புயலெனச் சீறிஇழந்த நாட்டை மீட்க
நாம் அணிவகுத்துள்ளோம்
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது படையணி கடக்க வேண்டியது
நெருப்பாறென்பது எமக்குத் தெரியும்!
ஆனால்...அதைத் தாங்கக் கூடிய
மக்கள் ஆதரவென்னும்கவசம் எம்மிடம் உண்டு!
எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது!
எமதுஆத்ம பலமோ அதைவிடவலிமைவாய்ந்தது!
எதிரியின் குண்டுகள் வெடிக்கும்...
ஆனால்எமது விடுதலை நெஞ்சங்கள்
எரிமலையென வெடிக்கும் சத்தத்தில்
அதன் சத்தம் அமுங்கிவிடும்!
நாம் அணிவகுத்துள்ளோம்....
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது அணிவகுப்புஎமது
தமிழ்ஈழ மக்களிடையேஅணிவகுத்துச் செல்கிறது!
நாம் செல்லும் இடமெல்லாம்...
எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்!
மக்களிடம் உள்ளபிரதேசம்
சாதிமதமென்னும் பேய்களும்அலறி ஓடுகின்றன...
எமது படையணி விரைகிறது...
எம தேசத்தை மீட்க!
நாம் செல்லும் இடமெல்லாம்...
காடுகள் கழனிகள் ஆகின்றன!
வெட்டிப் பேச்சு வீரர்கள்மிரண்டோடுகின்றனர்...!
உழைப்போர் முகங்களில்உவகை தெரிகிறது.
ஏழைகள் முகங்களில்புன்னகை உதயமாகிறது.
(தமிழீழ தேசியத் தலைவர்திரு.வே. பிரபாகரன் அவர்களால்1981 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கவிதை
Posted by Picasa

No comments:

Post a Comment