Nov 8, 2009

யார் ஆசுகார் நாயகன் ?

 

 


நேற்று நம்ம கைப்பேசிக்கு வந்தது அந்த குறுந்செய்தி.கலைஞானி கமல்காசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அனுப்பினது அட! நம்ம கமல்தாசன் சரி ஒரு போனப்போடுவோமுன்னு கூப்பிட்டு,தம்பி எங்கப்பா இருக்கினு கேட்டேன்.
அந்த கிறுக்குபய புள்ள இந்த மழைகாலத்துல ஊருக்குள்ள கட்டி முடிக்காத கட்டிடத்தின் மொட்டை மாடியிலிருந்து எல்லோருக்கும் செய்தி அனுப்பிட்டிருக்கான்.

இவன் எப்பவுமே இப்படித்தானுங்க, போன வருடம் எங்காளுக்கு பொறந்த நாளுன்னு சொல்லி பால்காரன்,பேப்பர்காரன்,தபால்காரன்,கொசு மருந்தடிக்கரவன் இப்படி பல வேடத்தில வந்து வாழ்த்து சொன்னான்,சித்தி சத்தம் போட்ட பின்னடிதான் நிறுத்தினான்.

வாப்பா,கமல்தாசா!என்ன உங்காளு பிறந்த நாள் அமர்க்களப்படுத்தற,நீட்டிய கேக்கை வாங்கிய படி கேட்க...

ஆமண்னே! எங்க உலக நாயகன்,காதல் இளவரசன்,கலைஞானி,ஆசுகார் நாயகன்னா சும்மாவா?

ஏய்!நிறுத்து எல்லாம் சரி,கடைசியில அதென்ன ஆசுகர் நாயகன் உங்காளு இவ்வளவு நாளா பிலிம் காட்டுனா பரவாயில்ல,அதுதான் தமிழ்நாட்டிலிருந்து ஏ.ஆர்.ரகுமான் வாங்கிட்டாரே! சும்மா இதையே சொல்லிட்டு...

ஏன்? எங்களுக்கு ஆசுகார் கிடைக்காதா? அப்படி ஒருவேளை கிடைக்கலைன்னா அது அந்த விருதுக்குத்தான் இழப்பு....

அடேய்! புல்லரிக்குதுடா!ஆசுகாரு தானே இந்த தசாவதாரம் தயாரிப்பாளர் கூட ஒன்னு வச்சிருக்கார் வாங்கிக்க சொல்லு..

அண்னே! உங்களுக்கெல்லாம் கிண்டலே பொழப்பா போச்சு,நாங்களும் வாங்குவோம்,அப்புறம் பாருங்க..

தம்பி,உங்காளு ஆசுகார் வாங்கனும்முன்னா,அவரு நடிச்ச படத்திலேயே எனக்கு பிடிச்ச படமொன்னு இருக்கு அதே மாதிரி இனிமே நடிக்க சொல்லு எனச் சொல்லியவாறே கேக் கொடுத்த பையன சும்மா அனுப்ப கூடாதுன்னு.
இந்தாப்பா!உங்காளு பிறந்தநாளுக்கு உனக்கென் அன்புப்பரிசு சொல்லி இந்த வார தமிழக அரசியல் இதழைத்தர...

கொலைவெறியோடு வாங்கிக் கொண்டே கேட்டான்.ஆமா! அதென்ன படம் உங்களுக்கு பிடிச்சது...

வேறென்ன 'பேசும்படம்' தான் அது.....

No comments:

Post a Comment