Nov 4, 2009

வாழும் அயோக்கியர்கள்...

 


நம்மூர்ல இந்த கந்தசாமியும்,முனுசாமியும் மாறி மாறிபிரசிடண்ட் ஆனதிலிருந்து ஒரே அளப்பாரைதான் போங்க ஊரெல்லாம் போசுடர் மயம்.

இந்த கந்தசாமி ஆளுக எங்கண்னண் வாழும் மகாத்மானு எழுத திருப்பி முனுசாமி ஆளுக வாழும் காமராசருன்னு இதெல்லாம் போதாதுனு நம்முரு புலவன் ஒருத்தன் பஞ்சாயத்து போர்டு மெம்பர் ஆயிட்டான் உடனே அந்தாளு வாழும் வள்ளுவன்னு எழுத, நம்மளுக்கு இதையெல்லாம் பார்க்கும் போது ஒரே சந்தேகதானுங்க.....

கந்தசாமி வாழும் மகாத்மானா,காந்தி வந்து செத்துப்போன கந்தசாமியா? காமராசர் செத்துப்போன முனுசாமியா?..இதெல்லாம் போதாதுனு நிரந்தர பொதுச்செயலாளரு,நாளைய முதல்வரு இப்படி வேற தனியா கிளம்பிட்டாங்க, அட! நிரந்தர மனுசனே கிடையாது வாழும் கலைவானர்(அடங் கொக்கமக்கா நமக்கும் இந்த நோய் தொத்திகிடுச்சு) பகுத்தறிவு புயல் விவேக்(தேவருங்கோ) மாதிரி சொன்னா அட இன்னைக்கு செத்த நாளைக்கு பால்....

சரி,இப்படி கிறுக்கறதுக்கு இடமெல்லாம் கிடையாது.அப்படித்தான் அன்னைக்கு அவிநாசி ரோட்டுல பதிக்க வைத்திருந்த குடிநீர் குழாயில நாளைய முதல்வரே வருக வருக..எழுதி வைக்க அப்பறம் வேறன்ன கொஞ்ச நாள் கழிச்சு நாளைய முதல்வரை எடுத்து புதைக்க வேன்டியதுதான்....
Posted by Picasa

No comments:

Post a Comment