Nov 10, 2009

தமிழரசன்,பாரதி விடுதலை...

 

 


கோவை சிறையிலிருந்து இன்று மாலை 7 மணியளவில் தேசிய கொடி எரிப்பு வழக்கிலிருந்து உச்சநீதிமன்ற பிணையில் வெளியான தோழர்கள் பா.தமிழரசன்(த.தே.போ.க),வே.பாரதி(த.தே.வி.இ) ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் பெ.தி.க பொதுச்செயலாளர் கோவை.கு.இராமகிருட்டிணன்,த.தே.வி.இயக்க தலைவர் தோழர்.தியாகு,த.தே.பொ.கட்சி பொதுச்செயலாளர் தோழர்.மணியரசன் மற்றும் அவ்வியக்கங்களை சார்ந்ந தோழர்கள்,பி.யு.சி.எல்,மற்றும் பல முற்போக்கு அமைப்புகளை சார்ந்த தோழர்கள் உட்பட்ட சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

எவ்வளவு காலங்கள் சிறையில் அடைத்தாலும் தேசிய கொடியை ஏற்ற மாட்டோம் என்ற தோழர்களின் உறுதியை அனைவரும் பாராட்ட,தோழர்கள் மற்றும் குடும்பத்தாருடன் தமிழரசனும்,பாரதியும் வீடு நோக்கி புறப்பட்டார்கள் அடுத்த கட்ட போரட்டத்துக்கும்,சிறைக்கும் அஞ்சோம் எனக்கூறியவாறே...
Posted by Picasa

No comments:

Post a Comment