Aug 9, 2009

சிறைக்கவிதை

நாங்கள் நாடுகடத்தப்பட்டவர்கள்
சட்டம் போட்டவர்திட்டங்கள் -ஆம்
நாடுகடத்தப்பட்டவர்கள்.....


இந்திய தேசியத்தின்
கைதிகள்
எங்களை பார்க்க
மனு போடனும்....

அம்மா கைப்பக்குவம்
அச்சு சோற்றிலில்லை
தொட்டுக்கொள்ள
தொழமை ஊறுகாய்களுன்டு...

வணக்கம் தோழர்!
என்றவாறேகூட்டத்தில்
உணர்வுபகிர்ந்தோமன்று -இங்கு
கூடத்தில் ஒரே தட்டில்
உணவு பகிர்ந்தவாறு...

கொட்டரையில் பயிலரங்கம்
கூடத்தில் பொதுக்கூட்டம்
கூர்மைபெற என்றுமே ஞாயிறுதான்...

பண்பலை பாட்டோடு
நடைப்பயிற்சி நாளுமுன்டு
நாடகப்பயிற்சியுன்டு....

நீதிமன்றம்
விசித்திரமான வழக்குகளை
சந்தித்துள்ளதாமே
அதன் விளைச்சல்களிங்கே...

தப்பித்த
குற்றவாளிகள்கோட்டையிலே
மாட்டிய ஆயிரம்நிரபதாரிகளிங்கே....

கூடி நின்னழுதா
சிறையே கொளமாகும்
சோகங்கள் ஆயிரம்....

நா செஞ்ச தப்பென்ன !
வீரப்பன் கூடப்பொறந்தது தவிர....
மனதைப்பிழியும்
மாதையன்...

கைதிகளிடம்
பிசுகட் பிடுங்கும்
மடச்சாம்பிராணிகளுமுன்டு....

காலா காலத்துல
கால் கட்டு போடும்
அப்பா இங்கில்லை
கைகட்டு போடும்
மாமனுகங்குன்டு....

கூடி கும்மியடித்து
போலிகளை பேட்டியெடுத்து
கேக் வெட்டிய
தலைவன்
மரணச்செய்திபாதிப்பில்லை...
செல்போன் சினுங்கலில்லை
செயற்கைகோள் தொலைக்காட்சி
தொல்லையில்லை..

வாழ்ந்த கதையிது
வந்த கதையினி....
Posted by Picasa

No comments:

Post a Comment