Nov 30, 2009

கருப்பு சட்டை போடக்கூடாது....






என்னடா! திடிரென்று இப்படி சொல்றானு பாக்கறிங்களா? அது இன்னும் 2 மாத்துக்கு மட்டும் தான்,கருப்பு சட்டையை போட்டுட்டு வெளிய போனால் சாமி மலைக்கு எப்ப? இதே கேள்வி தான்.

எனக்கு தெரிஞ்ச ஓட்டுநர் ஒருவர் மாலை போட்டுடார் அந்தாளு சொன்னத கேளுங்க '''சாமி ரோட்டில லாரிசாமி ஓட்டிட்டு வந்தப்ப ஒரு நாய்சாமி குறுக்க வந்துடுச்சு நான் மட்டும் பிரேக்சாமியை போடாம இருந்திருந்தா?'''மயக்கம் வர்றதொன்னுதான் பாக்கி கட்டுன பொண்டாட்டி பெத்த புள்ளயிலிருந்து எல்லாமே சாமிதான்...

இது போதாதுன்னு இப்படியெல்லாம பேசினா அய்யப்பன் உங்களை தண்டிச்சுடுவான் அப்படின்னு ஒர் கூட்டம்.

நமக்கு ஒரு யோசணை மலைக்கு போற வண்டியுல ஒரே ஒரு தட்டி வாசகம் தமிழிலும் மலையாளத்திலும் வச்சட்டு மலைக்கு போயிட்டு வர்ற (ஆ)சாமிகளுக்கு பாராட்டு விழா வச்சு பணமுடிப்பு வழங்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

என்ன சாமிகளா ரெடியா?
தட்டி வாசகம் இதோ '''கேரள அரசே!! உச்ச நீதி மன்ற ஆணையை ஏற்று முல்லை பெரியார் அனையின் நீர் மட்டத்தை உயர்த்து''''உயிரோட வந்த அடுத்த வருடம் சேர்ந்து மாலை போடலாம் சாமியோவ்வ்வ்வ்.....

அய்யப் ''பா''

நெடுஞ்சாலை பயணம்
அய்யப்பா! அய்யப்பா!
விபத்து
அய்யோ!!அப்பா!! அய்யோ!!அப்பா!!

பதினெட்டு படியேறி
குழியில்...

பம்பையில்
குளியல்
பன்றி காய்ச்சல்...

வரும் ஆண்டில்
அய்யப்பன்-டாசுமார்க்
புரிந்துணர்வு ஒப்பந்தம்...

இன்னும்
புலி பால் கறக்க
கேரளத்து பட்டிகள்...

பம்பையில்
முழ்கி எழுந்த
குடுமையில் பீய்...

(சாமியோவ் 2 படத்துக்கும் சம்பந்தமில்லீங்கோ...)
Posted by Picasa

1 comment:

  1. கட்டுரை நன்று தொடர்க உங்கள் செயல்,

    ReplyDelete